Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழர் பகுதியில் உள்ள அரச நிலங்கள் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்; எடுக்கப்பட்டது முக்கிய தீர்மானம்!

தமிழர் பகுதியில் உள்ள அரச நிலங்கள் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்; எடுக்கப்பட்டது முக்கிய தீர்மானம்!

2 years ago
in முக்கிய செய்திகள்

வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அரச நிலங்கள் அனைத்தையும் சீனி தொழிற்சாலை ஒன்றை அமைக்க பயன்படுத்த உள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கமைய வவுனியா- நயினாமடுவில் சீனித்தொழிற்சாலை ஒன்றை அமைப்பது தொடர்பான முன்மொழிவானது அமைச்சரவைக் கூட்டத்தில் திடீரென நேற்றைய தினம் (26.07.2023) முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார்.

இதேவேளை முதலீட்டுச் சபை மூலமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அறிவிப்பின்படி நயினாமடுவில், சீனி தொழிற்சாலை அமைப்பதற்கு மட்டும் 492 ஏக்கர் நிலம் வழங்கப்படவுள்ளது. தொழிற்சாலைக்கு வேண்டிய கரும்பு உற்பத்திக்காக மேலதிகமாக 30 ஆயிரம் ஏக்கர் நிலம் குறித்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது.

அத்துடன் மேலும் 42 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மேலதிக கரும்புச் செய்கைக்காக தனியாருக்கு வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கமைய வவுனியா மாவட்டத்தில் உள்ள அரச நிலங்கள் அனைத்தும் இந்த திட்டத்துக்காக வழங்கப்படுவதோடு அதன் அருகில் உள்ள மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்தும் இந்த திட்டத்திற்காக அரச காணிகளை கையளிக்க வேண்டியிருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதி தொடர்பில் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்களிடம் ஜனாதிபதி கேட்டதாகவும், அது தொடர்பில் இன்னும் படித்து பார்க்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்ததாகவும், அப்படி கருத்தூன்றி படிப்பதற்கு அதற்குள் ஒன்றுமில்லை என்றபடி ஜனாதிபதி அந்த விடயத்தை கடந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அரச தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கண்டியில் ஏற்பட்ட பேருந்து விபத்து; 37 பேர் காயம்
செய்திகள்

கண்டியில் ஏற்பட்ட பேருந்து விபத்து; 37 பேர் காயம்

May 13, 2025
வெசாக் பண்டிகையை முன்னிட்டு  பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை

May 13, 2025
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் சமரி அத்தபத்துவுக்கு ஐ.சி.சி அபராதம்
செய்திகள்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் சமரி அத்தபத்துவுக்கு ஐ.சி.சி அபராதம்

May 13, 2025
யாத்திரீகர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்து-20 பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

யாத்திரீகர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்து-20 பேர் வைத்தியசாலையில்

May 13, 2025
நாட்டில் மீண்டும் உப்பு பற்றாக்குறை
செய்திகள்

நாட்டில் மீண்டும் உப்பு பற்றாக்குறை

May 13, 2025
மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
Next Post
இலங்கையில் ஆயிரம் பாடசாலைகள் மூடப்படுகிறது!

இலங்கையில் ஆயிரம் பாடசாலைகள் மூடப்படுகிறது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.