Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்குவதா அல்லது இல்லையா என்பது மீளாய்வு செய்த பின்னரே தீர்மானிக்கப்படும்!

அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்குவதா அல்லது இல்லையா என்பது மீளாய்வு செய்த பின்னரே தீர்மானிக்கப்படும்!

2 years ago
in செய்திகள்

கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்திருந்த போதிலும், அதனை மீளாய்வு செய்து அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பானது அரசாங்கத்தின் நிதி நிலைமையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் போது, வாழ்க்கைக்கான நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் மேலும் விளக்கமளித்த அமைச்சரவைப் பேச்சாளர்,

2025 ஜனவரியில் சம்பள அதிகரிப்பு குறித்து அமைச்சரவை தீர்மானித்திருந்தது. அதற்கான பணத்தை ஒதுக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு செய்ய பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். எனவே எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் நிதி நிலைமையை மீளாய்வு செய்து இவ்வாறு சம்பள அதிகரிப்புக்கு செல்ல முடியுமா? முடியாத பட்சத்தில் அடுத்த பட்ஜெட் தாக்கல் செய்யும் போது எந்த அளவில், எத்தனை கட்டங்களில் செய்யலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். நாட்டின் நிதி நிலைமையை மீளாய்வு செய்த பின்னர் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் முறை குறித்து தீர்மானிக்கப்படும்-என்றார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
ராஜபக்ச குடும்பத்தினர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி நிரூபிக்க வேண்டும்; நாமல் சவால்!

ராஜபக்ச குடும்பத்தினர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி நிரூபிக்க வேண்டும்; நாமல் சவால்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.