Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசியப் பட்டியல் தருவதாக பொய் வாக்குறுதிகளை வழக்கும் ஹக்கீம்!

தேசியப் பட்டியல் தருவதாக பொய் வாக்குறுதிகளை வழக்கும் ஹக்கீம்!

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

என்னால் எடுக்கக்கூடிய உச்சக்கட்ட முயற்சியை நான் எடுத்த நிலையிலும் ஏனைய வேட்பாளர்கள் விட்டுக்கொடுப்பு செய்யாத காரணத்தினாலும், இறுதி நேரத்தில் சகோதரர் ஹரிஸ் அவர்களின் பெயர் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்படுவதில் தடங்கள் ஏற்பட்டது என்பது கவலைக்குரியது. அவ்வாறாக இருந்த போதிலும் கூட கட்சியின் தேசியப் பட்டியலில் அவர் பெயர் முதலாவதாக உள்வாங்கப்பட வேண்டும் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டது. அதையும் நாங்கள் சாதகமாக பரிசீலித்திருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்திருப்பது ஹரீஸ் அவர்களின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சியே தவிர வேறு காரணங்கள் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரமுகரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.சி.ஏ.சத்தார் தெரிவித்தார்.

சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

திகாமடுல்ல மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஷ் அவர்கள் உள்வாங்கப்பட வில்லை என்ற அறிவிப்பு வெளியானவுடன் கிழக்கு மாகாணத்தில் அவருக்கு எழுந்துள்ள அனுதாப அலையை கட்டுப்படுத்தவும், மாவட்டம் முழுவதிலுமுள்ள அவரின் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளவும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு எதிராக எழுந்துள்ள அதிருப்தியை சரிப்படுத்தவும், பாமர மக்களை இன்னும் இன்னும் ஏமாற்றலாம் என நினைத்து இப்படியான அறிவிப்புக்களை வெளியிடுகிறார்.

தேர்தல் சட்டத்தை மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர்பட்டியலானது வேட்புமனு இறுதித்தினத்தன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த பட்டியலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் எங்கும் ஒப்பமிடவில்லை என்பதாக அறிகிறோம்.

இந்த நிலையில் ஹரீஸ் அவர்களை எப்படி தேசிய பட்டியலில் நீங்கள் உள்ளடக்க முடியும். இது தேர்தல் சட்டத்தில் இல்லாத ஒரு விடயம். தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வாறு வேட்புமனுவில் பெயர்களை மாற்ற அனுமதிக்காதோ அதுபோன்று இனி அந்த தேசிய பட்டியலில் கூட மாற்றத்தை செய்ய அனுமதிக்காது. இவ்வாறான நிலையில் மக்களுக்கு ஹரீஸ் அவர்களை எம்.பியாக்க போவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றுகிறீர்கள்.

ஏற்கனவே ஒட்டமாவடிக்கும் தங்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டால் அங்கும் தேசிய பட்டியல் தருவதாக வாக்குறுதி வழங்கி அதுபோன்று பல ஊர்களுக்கும் ஹக்கீம் அவர்களினால் தேசிய பட்டியல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில், கல்முனை தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் கட்சி செயலாளர் நிஸாம் காரியப்பரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

அவருக்கு நிச்சயம் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படும் என்பதை அறிகிறோம். இப்போது முன்னாள் எம்.பி ஹரீஸுக்கும் மு.கா தேசிய பட்டியலில் எம்.பி பதவி வழங்க போவதாக கூறப்படுகிறது. மு.கா என்பது பரந்துபட்ட கட்சி கல்முனைக்கு இரண்டு தேசிய பட்டியல் என்ற விடயத்தை ஏனைய ஊர்கள் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது கட்சிபிரமுகர்கள் தான் ஏற்றுக்கொள்வார்களா? இதில் எங்காவது சாத்தியப்பாடுகளோ அல்லது லொஜிகோ இருக்கிறதா? இப்படியான கதையை சூழ்நிலைக்கு ஏற்ப மு.கா தலைவர் ஹக்கீம் அவிழ்த்து விடுவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.

மு.கா தலைவர் ஹக்கீம் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் ஒருவர் என்ற வகையில் இவ்வாறான விடயங்கள் இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து அல்லாஹ்வை அஞ்சி கொள்ள வேண்டும். பல்வேறு விடயங்களில் உலமாக்கள் முன்னிலையிலும், உலமாக்களிடமும் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இஸ்லாமியர்கள் உறுதியாக நம்பும் மறுமையை பயந்து இப்படியான வேலைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

தேசிய அடையாள அட்டை இல்லாததால் கொடுப்பனவை இழக்கும் முதியோர்கள்; அரசு ஆரம்பிக்கும் வேலைத்திட்டம்
செய்திகள்

தேசிய அடையாள அட்டை இல்லாததால் கொடுப்பனவை இழக்கும் முதியோர்கள்; அரசு ஆரம்பிக்கும் வேலைத்திட்டம்

June 29, 2026
உடைந்த புதுப்பாலத்திற்கு களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் சந்திரசேகர்-பிரபு
செய்திகள்

உடைந்த புதுப்பாலத்திற்கு களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் சந்திரசேகர்-பிரபு

June 29, 2026
நுளம்பு புகை விசிறலால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு; சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம்
செய்திகள்

நுளம்பு புகை விசிறலால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு; சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம்

June 29, 2026
கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட மட்டு நகர் புதுப்பாலம் உடைந்துவீழ்ந்தது
காணொளிகள்

கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட மட்டு நகர் புதுப்பாலம் உடைந்துவீழ்ந்தது

June 28, 2026
கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
செய்திகள்

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

June 28, 2026
இலங்கைக்கு மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அவசியம்; சஜித் பிரேமதாச!
செய்திகள்

இலங்கைக்கு மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அவசியம்; சஜித் பிரேமதாச!

June 28, 2026
Next Post
ஈஸ்டர் தின தாக்குதலின் அறிக்கை விவகாரம்; கம்மன் பிலவுக்கு காலக்கெடு!

ஈஸ்டர் தின தாக்குதலின் அறிக்கை விவகாரம்; கம்மன் பிலவுக்கு காலக்கெடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.