Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் தொடர்பில் அநுர தரப்பு தகவல்!

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் தொடர்பில் அநுர தரப்பு தகவல்!

8 months ago
in செய்திகள்

முன்னைய அரசாங்கம் உகண்டாவில் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் சட்டத்தரணியுமான நிலாந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

உகண்டாவிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்ற, சட்டவிரோதமாக பெறப்பட்ட உழைக்கப்பட்ட பணத்தை மீட்கவேண்டிய பரந்துபட்ட சூழமைவின் அடிப்படையிலேயே உகண்டாவில் உள்ள களவாடப்பட்ட சொத்துக்கள் குறித்து நான் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தேன்.

நான் தெரிவித்தமைக்காக நான் முழுப்பொறுப்பையும் ஏற்கின்றேன். நான் தெரிவித்த சில கருத்துக்களிற்காக எனக்கு எதிராக அவதூறு பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர். எனக்கு உகாண்டா குமாரி மெனிக்கே என பட்டப்பெயர் சூட்டியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நான் ஆற்றிய உரைகளின் போது சட்டமொழுங்கு நீதியை நிலைநாட்டுவது குறித்தும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அநுரகுமார திசநாயக்கவினால் அதனையே செய்ய முடியும் என்பதையும் நான் குறிப்பிட்டிருந்தேன்.

எங்களுடைய முழுமையான திட்டத்தில் களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான அமைப்பொன்றை ஏற்படுத்த உறுதியளித்திருந்தோம்.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் அவ்வாறான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அவ்வாறான அமைப்புகள் உள்ளன. பொதுமக்களின் வரிப்பணத்தை துஸ்பிரயோகம் செய்து அதனை வெளிநாட்டில் முதலீடு செய்திருந்தால் அதனை மீட்பதற்கான கட்டமைப்புகள் உள்ளன.

என்னுடைய அந்த உரையின் போது உகண்டாவில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்கவேண்டியதன் அவசியம் குறித்து நான் குறிப்பிட்டிருந்தேன்.

நான் அந்த உரையை ஆற்றியவேளை பணம் அச்சிடும் டி லாரூ நிறுவனம் இலங்கையில் அச்சடித்த பணத்தின் ஒரு பகுதியை உகண்டாவிற்கு அனுப்பியது என்பதை நான் அறிந்திருந்தேன், என்னுடைய கருத்து பேசுபொருளாக மாறியது.

முன்னைய அரசாங்கம் உகண்டாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் முதலீடு செய்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம். கறுப்பு பணம் சட்டவிரோத பணபரிமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களும் உள்ளன.

எங்களுடைய அரசாங்கத்தின் போது களவாடப்பட்ட சொத்துக்களை பணத்தை மீட்பதற்கான சட்டங்களை இயற்றவுள்ளோம்.

தேசிய மக்கள் முன்னணி அரசாங்கமாகயிருந்தாலும் சரி எந்த அரசாங்கமாகயிருந்தாலும் சரி பொதுமக்களின் பணம் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை.

நான் தெரிவித்த விடயங்களிற்கு நான் முழுமையாக பொறுப்பேற்கின்றேன். உகண்டாவாகயிருந்தாலும் சரி எங்கிருந்தாலும் சரி நாங்கள் அதனை கையாளும் பொறுப்பை ஏற்போம்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு நான் தெரிவித்த விடயத்தினை கேள்விக்குட்படுத்துவதற்கான அதற்கு எதிராக சவால் விடுவதற்கான அனைத்து உரிமையும் உள்ளது நாங்கள் அவருக்கு பொருத்தமான தருணத்தில் பதிலளிப்போம்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி போராட்டம்
செய்திகள்

மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி போராட்டம்

June 17, 2025
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு
செய்திகள்

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு

June 16, 2025
புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்
செய்திகள்

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்

June 16, 2025
இஸ்ரேல் வேலைக்காக இலங்கையர்களை அனுப்பும் திட்டம் நிறுத்தம்
செய்திகள்

இஸ்ரேல் வேலைக்காக இலங்கையர்களை அனுப்பும் திட்டம் நிறுத்தம்

June 16, 2025
எனது குடும்பத்திற்கு பிரபாகரனால் நிகழாதது கூட ராஜபக்ஸர்களால் நிகழ்ந்தது; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
செய்திகள்

எனது குடும்பத்திற்கு பிரபாகரனால் நிகழாதது கூட ராஜபக்ஸர்களால் நிகழ்ந்தது; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

June 16, 2025
காதலனின் கார் வாங்கும் விருப்பத்தை நிறைவேற்ற வீட்டில் 20 இலட்சம் திருடிய மாணவி
உலக செய்திகள்

காதலனின் கார் வாங்கும் விருப்பத்தை நிறைவேற்ற வீட்டில் 20 இலட்சம் திருடிய மாணவி

June 16, 2025
Next Post
நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு பிரச்சனைக்கு தீர்வு

நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு பிரச்சனைக்கு தீர்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.