Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பாரிய நிதி மோசடி

மட்டு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பாரிய நிதி மோசடி

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் கடந்த 5 வருடங்களாக இடம்பெற்றுள்ள 58 இலட்சத்து 5 ஆயிரத்து 853 ரூபா நிதி மோசடி தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகம் 2024ஆம் ஆண்டு பொறுப்பேற்றதையடுத்து நிதி தொடர்பாக ஆராய்ந்தபோது நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டது. அப்போது சங்கத்தின் பொருளாராக இருந்தவருக்கு எதிராக மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது இந்த சிக்கன நலன்புரி சங்கத்தில் வைத்தியசாலையில் கடமையாற்றும் சுமார் ஆயிரம் பேருக்கு அதிகமானோர் உறுப்பினர்களாக இருப்பதுடன் மாதாந்தம் சம்பளத்தில் ஆயிரம் ரூபாவை சந்தா பணமாக செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் ஒருவர் (அற்றன்டன்) கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பொருளாளராக பொறுப்பேற்று 2019 தொடக்கம் 2023 வரையான காலப்பகுதிவரை கடமையாற்றி வந்துள்ளதுடன், சங்க நிர்வாகத்தில் கடமையாற்ற வைத்தியசாலையை விட்டு வெளியாள் பெண் ஒருவர் மாதாந்த சம்பளத்துக்கு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

இதன்போது பொருளாளர் சங்கத்தின் உறுப்பினர் பலரின் பெயரில் அவர்களுக்கு தெரியாமல் கடன் விண்ணப்பங்களை பூர்த்திசெய்து கடன் பெற்று பணத்தை மோசடி செய்து வந்துள்ளார்.

இவ்வாறு பொருளாளர் அவரது உதவிக்கு நியமித்த பெண் ஆகியோர் கடந்த 5 வருடத்தில் 58 இலட்சத்து 5 ஆயிரத்து 853 ரூபா நிதியை மோசடி செய்துள்ளது என மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட பல விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்ட சங்கத்தின் முன்னாள் பொருளாளர் மோசடி செய்த பணத்தில் 39 இலட்சம் ரூபா பணத்தை திரும்ப ஒப்படைத்துள்ளதுடன், அவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட அங்கு கடமையாற்றிவந்த பெண் 19 இலட்சம் ரூபாவை இதுவரை ஒப்படைக்கவில்லை.

இருந்தபோதும் இந்த பாரிய நிதி மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன், இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து இவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை வைத்தியசாலையில் இயங்கிவரும் இன்னொரு கூட்டுறவு சங்கத்தில் கோடிக்கணக்கான பண மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பொருளாளராக இருந்து மோசடி செய்தவர் அந்த சங்கத்தில் இருந்துள்ளதாகவும், சங்க யாப்பின்படி கடந்த யூலை மாதம் சங்க பொதுக் கூட்டம் கூட்டப்படவேண்டியது இன்னமும் கூட்டாமல் இருப்பதாகவும் சங்க உறுப்பினர்கள் அச்சம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மட்டு கல்லடி பகுதியில் வைத்து இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் உள்நாட்டு இறைவரி தினைக்கள அதிகாரி கைது

மட்டக்களப்பில் காணி தொடர்பாக இரண்டு இலச்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (15) கல்லடி பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயம்; மட்டக்களப்பு மாநகரசபை அறிவிப்பு
செய்திகள்

வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயம்; மட்டக்களப்பு மாநகரசபை அறிவிப்பு

July 8, 2026
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

July 8, 2026
இனி பேச்சே இல்லை; ஈரானுடனான உறவை முற்றாக முடித்துக் கொண்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
உலக செய்திகள்

இனி பேச்சே இல்லை; ஈரானுடனான உறவை முற்றாக முடித்துக் கொண்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

July 8, 2026
தொல்பொருள் திணைக்களம் இன, மத சார்பின்றிசெயற்படுகிறது-இளங்குமரன் எம்.பி
காணொளிகள்

தொல்பொருள் திணைக்களம் இன, மத சார்பின்றிசெயற்படுகிறது-இளங்குமரன் எம்.பி

July 8, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்ற அதிகாரி உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்ற அதிகாரி உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

July 8, 2026
“120 ரூபாய்க்கு நெல் விற்க சம்மதம் இல்லை”; கமக்காரர்கள் அமைப்பு
காணொளிகள்

“120 ரூபாய்க்கு நெல் விற்க சம்மதம் இல்லை”; கமக்காரர்கள் அமைப்பு

July 8, 2026
Next Post
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ள விசேட அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ள விசேட அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.