பாராளுமன்ற உறுப்பினர் இராம்நாதன் அர்ச்சுனா, “நான் நாமல் ராஜபக்சவை ஏற்றுக் கொண்டு விட்டதாக செய்யும் பிரச்சாரங்களை நம்பி சும்மா குளற வேண்டாம்! எதிரி எப்போதும் எதிரி தான்!”என்று முகநூல் பதிவில் நேற்று (02) தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக தனது வாகனத்தை வலுக்கட்டாயமாக நிறுத்தி காவல்துறையினரின் கடமையைத் தடுத்ததற்காக செப்டம்பர் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சூழலில், அர்ச்சுனாவை காண நாமல் ராஜபக்ச நீதிமன்றத்துக்கு சென்ற சம்பவம் பொதுமக்களிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியிருந்தது. மேலும், சமூக ஊடகங்களில் “அர்ச்சுனா ராஜபக்ச” எனக் குறிப்பிடும் பதிவுகளும் பரவியிருந்தன.
இதனையடுத்து, எந்தவித அரசியல் இணைப்பும் இல்லை எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் எம்.பி. அர்ச்சுனா தனது முகநூல் பதிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.








