இராணுவ கட்டுப்பாட்டுக்குள் மடகஸ்கார் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மடகஸ்கார் இராணுவம், நாட்டின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.
பொது ஒழுங்கை மீட்டெடுப்பதையும் குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அந்நாட்டு ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா இந்த நடவடிக்கையை அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சட்டவிரோத முயற்சி என்று கண்டனம் செய்து தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








