மட்டக்களப்பு மாவட்டத்திலும் தரமான திரைப்படங்களை உருவாக்கக்கூடிய திறமைசாலிகள் உள்ளனர் என்று ‘அம்மு’ திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. நிலு தெரிவித்துள்ளார்.
‘அம்மு’ திரைப்படக்குழுவினர் பங்கேற்ற ஊடக சந்திப்பு மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதில் திரைப்படத்தின் முக்கிய தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்தனர்.
வரும் 15ஆம் திகதி தாழங்குடா பிசி சினிமா அரங்கில் ‘அம்மு’ திரைப்படம் திரையிடப்படவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு திரைப்படம் தொடர்பான விபரங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடுசெய்யப்பட்டது.








