Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேனிலவுக்காக இலங்கை வந்த தம்பதி; நாடு திரும்பி தற்கொலை

தேனிலவுக்காக இலங்கை வந்த தம்பதி; நாடு திரும்பி தற்கொலை

6 months ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த புதுமணத் தம்பதியினர், இலங்கையில் தங்கள் தேனிலவை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் இரு வேறு இடங்களில் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை பெங்களூரில் 26 வயதான பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் துன்புறுத்தல் மற்றும் நிராகரிப்பு காரணமாக குறித்தப் பெண் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இலங்கையில் தேனிலவுக்குச் சென்றிருந்தபோது கணவர் தனது மனைவியின் கடந்தகால உறவைப் பற்றி அறிந்த பின்னர் இந்த சம்பவம் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தம்பதியிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே டிசம்பர் 21ஆம் திகதி பெங்களூரு திரும்பினர்.

வீடு திரும்பிய பிறகும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணை இடைவிடாது அவமானப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

குடும்ப கௌரவம் கருதி அந்தப் பெண் விவாகரத்து செய்ய விரும்பாமல் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டுள்ளார்.

எனினும், மன உளைச்சல் தாங்க முடியாமல் கடந்த வியாழக்கிழமை அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர், அவரது கணவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் நாக்பூருக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், பெண்ணின் கணவர் கடந்த வெள்ளிக்கிழமை நாக்பூரில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது.

மேலும் அவரது தாயாரும் தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது, ​​கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு
உலக செய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு

June 21, 2026
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

June 21, 2026
பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை

June 21, 2026
தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது
செய்திகள்

தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது

June 21, 2026
தயா கமகேவின் 47.3 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விட மக்கள் வங்கி நடவடிக்கை
செய்திகள்

தயா கமகேவின் 47.3 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விட மக்கள் வங்கி நடவடிக்கை

June 21, 2026
சமூக ஊடகங்கள் ஊடாக இலங்கை பெண்களை குறிவைக்கும் நபர்கள்
செய்திகள்

சமூக ஊடகங்கள் ஊடாக இலங்கை பெண்களை குறிவைக்கும் நபர்கள்

June 21, 2026
Next Post
காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஆற்றில் குதித்த யுவதி

காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஆற்றில் குதித்த யுவதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.