ஈரானியப் புரட்சிகர காவல்படை (IRGC) இன்று(11) நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களின் போது, ஒரு ஏவுகணையின் முன்பகுதியில் “எப்ஸ்டீன் தீவின் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக” (In Memory Of Epstein Island Victims) என்ற வாசகம் எழுதப்பட்ட புகைப்படம் ஈரானிய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய ‘எப்ஸ்டீன் தீவு’ விவகாரத்தைக் குறிப்பிட்டு, அதனோடு தொடர்புடைய உலக குற்றவாளிகளின் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ஒரு வகையான உளவியல் ரீதியான செய்தியாக இந்த வாசகம் ஏவுகணையில் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்க விர்ஜின் தீவுகளில் உள்ள ஒரு தீவுடன் தொடர்புடைய பாலியல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்.
குறிப்பாக வெடிமருந்துகளில் அரசியல் அல்லது குறியீட்டு செய்திகளை எழுதுவது என்பது உலகளவில் பல்வேறு இராணுவ மற்றும் துணை ராணுவக் குழுக்களால் தங்கள் எதிரிகளுக்கு ஒரு செய்தியை அனுப்பப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான நடைமுறையாகும்.

இந்த குறிப்பிட்ட வழக்கில், இந்த எழுத்து உளவியல் அல்லது தகவல் போரின் ஒரு வடிவமாகத் தோன்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது,
இதேவேளை, ஈரானியப் பேராசிரியர் ஃபுவாட் இசாதி (Foad Izadi) சமீபத்திய நேர்காணல் ஒன்றில், இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கத் தலைமைகளை ‘எப்ஸ்டீன் வர்க்கம்’ (Epstein Class) எனச் சாடியிருந்த பின்னணியில் இந்தப் புகைப்படம் முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் எப்ஸ்டீன் விவகாரத்துடன் தன்னுடனான உறவை மறைப்பதற்காகவே ட்டோனால்ட் ரம்ப் போரை கையில் எடுத்திருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்








