Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம்; நீதி அமைச்சர் உறுதி!

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம்; நீதி அமைச்சர் உறுதி!

3 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான பிரச்சனைகளை எதிர்வரும் 2 வருடங்களுக்குள் தீர்த்து வைக்க எதிர்பார்ப்பதாகவும் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தில் வென்றவர்கள் , தோற்றவர்கள் என்னு இல்லாமல் எல்லாம் இழந்தவர்களே எஞ்சினார்கள்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் , அபிவிருத்தி போன்ற பல பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது.

அது யுத்தம் செய்வதனை விட கடினமானது.

வடக்கு , தெற்கு , மலையகம் என்ற எந்த வேறுபாடுகளும் இன்றி இந்த நாட்டு மக்கள் அந்த பொறுப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கைகளில் தந்துள்ளனர்.

அந்த பொறுப்பை ஏற்றுள்ள எமது அரசாங்கம் , இனவாத , மதவாத , பிரதேச வாத வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒரே மக்கள் என்ற நிலைப்பாட்டில் செயற்படுகின்றோம்.

நாட்டு மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கருத்தியல்களை உருவாக்குவதோ , கலந்துரையாடல்கள் மூலமோ முடியாது. அதனை செயற்பாட்டு ரீதியாக செயற்படுத்த வேண்டும்

யுத்தத்தில் நடக்க கூடாத பல விடயங்கள் நடந்து விட்டன.

அதன் வலிகள் ஆழ் மனங்களில் இன்றும் காணப்படும். அதனை மறக்க வேண்டும் என நாம் கேட்கவில்லை. ஆனால் கடந்த காலத்தில் இருந்து நாம் மாறி முன்னோக்கி செல்ல வேண்டும். அதற்காக புதிய சிந்தனைகள் ஊடாக எமது எதிர்காலத்தை சிந்தித்து செயல்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்.

அதற்காக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு கடந்த கால அரசாங்கங்கள் உரிய வசதிகளை செய்து கொடுக்கவில்லை.

அந்த குறைபாடுகளை எமது அரசாங்கம் தீர்த்துள்ளது. அதற்காக பெருமளவான நிதியினை ஒதுக்கியுள்ளது.

பல வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தற்போது வரையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவகத்திற்கு எமது அரசாங்கம் 375 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்துள்ளது.

69 வேலை வெற்றிடங்களை நிரப்பியுள்ளோம்

எமது அரசாங்கத்தை பொறுத்த வரையில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை எதிர்வரும் 2 வருட காலத்திற்குள் தீர்த்து வைக்க எதிர்பார்க்கிறோம்.

அதற்காக விசாரணைகளை துரிதமாக முன்னெடுத்துள்ளோம்.

எமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு , காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் , அதற்கு காரணமானவர்களை கண்டறிந்து , அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை செய்வது

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும்.

ஒரு உயிரின் மதிப்புக்கு அரசாங்கம் நிதி கொடுக்க அரசாங்கத்திடம் நிதியில்லை. ஒரு உயிருக்கு இவ்வளவு பெறுமதி என மதிக்க முடியாது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளில் , சாட்சியங்கள் ஆதாரங்களின் , அடிப்படையிலும் , தரவுகளின் அடிப்படையிலும் , சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அது சில வேளைகளில் மக்கள் எதிர்பார்த்த நீதி கிடைக்காமல் போகலாம்.

ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கும். அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உதவி , வீட்டு திட்ட உதவி , தொழில் வாய்ப்பு என உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்போம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை நீதியான முறையில் தீர்க்கவே எதிர்பார்க்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு அதிபரை நியமிக்க கோரிக்கை
செய்திகள்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு அதிபரை நியமிக்க கோரிக்கை

June 22, 2026
2025 இல் இலங்கையில் அரிசி இறக்குமதி 40% அதிகரிப்பு; அரச அறிக்கையில் முக்கிய தகவல்கள்!
செய்திகள்

2025 இல் இலங்கையில் அரிசி இறக்குமதி 40% அதிகரிப்பு; அரச அறிக்கையில் முக்கிய தகவல்கள்!

June 22, 2026
பசில் ராஜபக்சவை இன்டர்போல் கைதுசெய்யுமா?
செய்திகள்

பசில் ராஜபக்சவை இன்டர்போல் கைதுசெய்யுமா?

June 22, 2026
89 நிறுவனங்கள் மூலம் மில்லியன் டொலர் மோசடி; நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி கைது!
செய்திகள்

89 நிறுவனங்கள் மூலம் மில்லியன் டொலர் மோசடி; நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி கைது!

June 22, 2026
வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு துரோகம் இழைத்த தமிழரசுக்கட்சி; சுகாஸ் குற்றச்சாட்டு!
செய்திகள்

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு துரோகம் இழைத்த தமிழரசுக்கட்சி; சுகாஸ் குற்றச்சாட்டு!

June 22, 2026
ஏறாவூர் வட்டாரத்தில் ஒரு கோடி ரூபா நிதியில் சிறுவர் பூங்கா
செய்திகள்

ஏறாவூர் வட்டாரத்தில் ஒரு கோடி ரூபா நிதியில் சிறுவர் பூங்கா

June 22, 2026
Next Post
PHI அதிகாரிகள் பெயரில் பண மோசடி; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

PHI அதிகாரிகள் பெயரில் பண மோசடி; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.