அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் இன்று முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இந்தக் கொடுப்பனவின் கீழ் நாடு முழுவதும் 270,025 தகுதியான குடும்பங்கள் பயனடையவுள்ளன.
அதற்காக மொத்தமாக 3.287 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 3,287,163,750 ரூபா தொகை இன்று தகுதி பெற்ற பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
குறித்த கொடுப்பனவுகளை பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








