கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விடுதி ஒன்றில் போதைப்பொருட்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மாணவரின், மாணவர் தகுதியை இரத்து செய்வதற்கும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கலைப்பீடத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த குறித்த மாணவன், பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் விடுதியில் தங்கியிருந்த அறையை பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு ஆய்வு செய்தபோது, இந்தப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருட்களை எடைபோட்டுப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தராசு மற்றும் ரூ. 75,000 ரொக்கப் பணத்தையும் அந்த மாணவரிடம் இருந்து ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை சட்ட நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், பல்கலைக்கழகமும் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியிருந்தது.
பல்கலைக்கழகம் நடத்திய விசாரணை அறிக்கையின்படி, குறித்த மாணவரின், மாணவர் தகுதியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், துணைவேந்தர் பேராசிரியர் தெரன்ஸ் மதுஜித்தின் பரிந்துரையின் பேரில் அது தொடர்பான கடிதம் மாணவரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








