ஹோமாகம, கொட்டாவ உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (24) மாலை 6.00 மணி முதல் நாளை மறுதினம் (25) மாலை 6.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய கலகெதர, ஹோமாகம, கொட்டாவ, பன்னிபிட்டிய, பெலன்வத்தை மற்றும் மஹரகம உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
லபுகம மற்றும் கலட்டுவாவ நீர்த்தேக்கங்களிலிருந்து மஹரகம வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் பொதுமக்கள் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








