பாடசாலை மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டு இணையவழியில் (Online) முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மின்-சிகரெட் விநியோக வலையமைப்பொன்றை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் அதிரடியாக முறியடித்துள்ளனர்.
யக்கல, வீரபுல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, ரீசார்ஜ் செய்யக்கூடிய 65 மின்-சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கும், இளம் யுவதிகளுக்கும் தந்திரோபாயமாக இவற்றை விற்பனை செய்துள்ளார். நாட்டில் மின்-சிகரெட் பாவனை அதிகரித்து வரும் பின்னணியில், இந்த கடத்தலுக்குப் பின்னால் உள்ள பிரதான விநியோகஸ்தர்களைக் கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.








