எல்லப் பகுதியில் தற்போது கடும் மழை பதிவாகாத நிலையிலும், ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீரென நீர்ப்பெருக்கு கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, தாழ்நிலப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் திடீர் நீர்மட்ட உயர்வு போன்ற அபாயங்கள் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதால், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், நீர்வீழ்ச்சி மற்றும் ஆறுகளின் அருகாமைக்கு செல்லாமல் தவிர்க்குமாறும், ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







