Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாழ் இளைஞன் குகதாஸ் மதுலன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாழ் இளைஞன் குகதாஸ் மதுலன்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.

ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

முன்னதாக கடந்த வருடம் காயத்தால் முழுமையாக விளையாடாத தீபக் சஹருக்கு பதிலாக இலங்கையின் இளம் வீரர் மதிஷா பதிரனா வாய்ப்பு பெற்றார்.

அந்த வாய்ப்பில் இலங்கை ஜாம்பவான் முன்னாள் வீரர் லசித் மலிங்கா போல சிலிங்கா ஆக்சனை பயன்படுத்தி 19 விக்கெட்டுகள் எடுத்த அவர் சென்னை 5-வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினர்.

அதனால் மும்பைக்கு மலிங்காவை போல சென்னைக்கு பதிரனா கிடைத்துள்ளதாக சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் மலிங்காவை போலவே சிலிங்கா ஆக்சனை பயன்படுத்தி பந்து வீசும் மற்றுமொரு இளம் பவுலரை சிஎஸ்கே கண்டறிந்துள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணம் நகரைச் சேர்ந்த குகதாஸ் மதுலன் எனும் 17 வயது கொண்ட அந்த வீரர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியுள்ளார்.

குறிப்பாக செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி அளவிலான தொடரில் அதிரடியான வேகத்தில் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி அசத்திய அவரை சிஎஸ்கே அணி நிர்வாகம் கண்டறிந்துள்ளது.

அதனால் ஐபிஎல் 2024 தொடரில் நெட் பவுலராக செயல்படுவதற்கு அவரை அழைத்து வந்துள்ளதாக தலைமை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் அவரை நெட் பவுலராக அழைத்து வந்தோம். இது சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் தேர்வாகும். அதில் எம்எஸ் தோனி ஈடுபடவில்லை. ஸ்லிங்கி ஆக்சனை கொண்டுள்ள மதுலன் எங்களுக்கு பயிற்சியில் உதவியாக இருப்பார் என்று நாங்கள் கருதினோம்.

பொதுவாக நாங்கள் வித்தியாசமான வேரியசன்களை கொண்டுள்ள பவுலர்களை பயிற்சியில் பயன்படுத்துவோம். அவர் அது போன்றவர்” என்று கூறினார்.

முன்னதாக பதிரானாவும் இதே போல முதலில் நெட் பவுலராக செயல்பட்டு பின்னர் சென்னை அணியில் நேரடியாக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

அதேசமயம் சிஎஸ்கே அணிக்கு மதுலனை பரிந்துரை செய்தவர் தோணிதான் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

17 year old Jaffna slinga “Kugadas Mathulan” is currently at Chennai as M s Dhoni wanted to have a look at his Bowling. He wil be a net bowler for @ChennaiIPL during the IPL 2024. pic.twitter.com/3lHMzcHSJd

— Nibraz Ramzan (@nibraz88cricket) March 14, 2024

தொடர்புடையசெய்திகள்

வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்
செய்திகள்

வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்

June 15, 2026
டக்ளஸை அம்பலப்படுத்திய அமெரிக்கா; டக்ளஸை சுற்றி இறுகும் பிடிகள்
செய்திகள்

டக்ளஸை அம்பலப்படுத்திய அமெரிக்கா; டக்ளஸை சுற்றி இறுகும் பிடிகள்

June 15, 2026
அவுஸ்திரேலியாவின் அதியுயர் விருது பெற்ற தமிழ் பேராசிரியர்; உலகளவில் சாதித்த டெரன்ஸ் ஜெயரட்ணம்
செய்திகள்

அவுஸ்திரேலியாவின் அதியுயர் விருது பெற்ற தமிழ் பேராசிரியர்; உலகளவில் சாதித்த டெரன்ஸ் ஜெயரட்ணம்

June 15, 2026
மனோரி சலே கோரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு அஸ்கிரி மகாநாயக்க தேரர் வேண்டுகோள்!
செய்திகள்

மனோரி சலே கோரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு அஸ்கிரி மகாநாயக்க தேரர் வேண்டுகோள்!

June 15, 2026
ரெலோ தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு; எதிராக ஒரு குழு நீதிமன்றம் செல்கிறது
அரசியல்

ரெலோ தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு; எதிராக ஒரு குழு நீதிமன்றம் செல்கிறது

June 15, 2026
ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒட்டுக்கேட்பில் சிக்கிய இரு இலங்கையர்கள்!
செய்திகள்

ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒட்டுக்கேட்பில் சிக்கிய இரு இலங்கையர்கள்!

June 15, 2026
Next Post
இடமாற்றப்படும் பொலிஸ் தலைமையகம்!

இடமாற்றப்படும் பொலிஸ் தலைமையகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.