Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நான் சாம்பலிலிருந்து எழுந்து வந்த வரலாறும் உள்ளது; வாக்களிக்காதவர்களுக்கும் நன்றி தெரிவித்த மனோ

நான் சாம்பலிலிருந்து எழுந்து வந்த வரலாறும் உள்ளது; வாக்களிக்காதவர்களுக்கும் நன்றி தெரிவித்த மனோ

2 years ago
in செய்திகள்

கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது முகநூலில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த பதிவில் அவர் தெரிவிக்கையில்,

தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஆட்சி அமைக்கும் அநுர அரசுக்கும் வாழ்த்துக்கள்!

நாட்டின் தேசிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற நிகழ்வுகள் நடக்கும் கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க நமது கட்சி எடுத்து கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.

இன்று இருந்து ஒரு தமிழர் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய் விட்டது.

பல இனங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒவ்வொரு இனமும் தமது பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து கொள்வது, அதிகரிப்பது, இயல்பான ஜனநாயக செயற்பாடுகளாகும்.

ஆனால், கொழும்பு தலைநகர் மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அது இன்று சாத்தியப்படவில்லை.

2010ம் வருடம் கண்டி மாவட்டத்து தமிழர் பிரதிநிதித்துவத்தை பெற நான் ஒரு கட்சி தலைவராக மேற்கொண்ட முயற்சியின் போது, இத்தகைய ஒரு “வெற்றி பெறாமை” என்ற சூழலை எதிர் கொண்டேன்.

பின்னர் நான் சாம்பலில் இருந்து எழுந்து வந்தேன். அது வரலாறு.

நடந்து முடிந்த தேர்தலில் கட்சியின் சக வேட்பாளர் தம்பி லோஷன் புதிய அனுபவங்களை கற்று கொண்டார். கடும் முயற்சியாளர், சமூக பற்றாளரான அவருக்கு எனது பாராட்டுகள்!

கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், இருந்த தமது இரண்டு பிரதிநிதித்துவங்களை தக்க வைத்து கொண்டு, இன்று அதை மூன்றாக அதிகரித்தும் கொண்ட, தமிழ் பேசும் சகோதர முஸ்லிம் உடன்பிறப்புகளுக்கு எனது இதயபூர்வ பாராட்டுகள்!

எமக்கு வாக்களித்த,வாக்களிக்காத அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் அதன் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஏ.ஆர்.வி.லோஷன் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்ட போதும் அவர்களால் வெற்றிபெற முடியாமல் போயுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரயில்வே ஊழியர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு
செய்திகள்

ரயில்வே ஊழியர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு

August 26, 2026
யால தேசிய பூங்காவின் 2 வளாகங்கள் மூடப்பட்டது
செய்திகள்

யால தேசிய பூங்காவின் 2 வளாகங்கள் மூடப்பட்டது

August 26, 2026
நேபாள வெள்ளம்: 95 பேர் உயிரிழப்பு; 403 பேர் மாயம்-video
செய்திகள்

நேபாள வெள்ளம்: 95 பேர் உயிரிழப்பு; 403 பேர் மாயம்-video

August 26, 2026
“நவோதயாகம” வீட்டுத்திட்டம் நாளை மறுதினம் மக்கள் கையில்
செய்திகள்

“நவோதயாகம” வீட்டுத்திட்டம் நாளை மறுதினம் மக்கள் கையில்

August 26, 2026
நெல் ஆலை உரிமையாளர்களுக்கு 25 இலட்சம் வட்டியில்லா கடன்
செய்திகள்

நெல் ஆலை உரிமையாளர்களுக்கு 25 இலட்சம் வட்டியில்லா கடன்

August 26, 2026
கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்
செய்திகள்

கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்

August 26, 2026
Next Post
வெள்ளையர்களே வெளியேறு; கனடாவிற்கு உரிமை கோரும் காலிஸ்தானியர்கள்

வெள்ளையர்களே வெளியேறு; கனடாவிற்கு உரிமை கோரும் காலிஸ்தானியர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.