Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தங்காலையில் 88 வயது முதியவர் கொலை; மகன் சந்தேகத்தின் பேரில் கைது!

தங்காலையில் 88 வயது முதியவர் கொலை; மகன் சந்தேகத்தின் பேரில் கைது!

51 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகொட பகுதியில், 88 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவரது சடலம் நேற்று (11) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பெலியத்த, சியம்பலாகொட, திகங்வல பகுதியைச் சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால என அடையாளம் காணப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான அவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று இரவு சுமார் 8.00 மணியளவில், வீட்டின் முன்புறத்தில் உள்ள தண்ணீர் குழாய்க்கு அருகில் இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள் கண்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சடலத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், உயிரிழந்தவரின் 48 வயதுடைய இளைய மகன் சந்தேகத்தின் பேரில் தங்காலை தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஓய்வுபெற்ற கடற்படைச் சிப்பாய் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்ற தினம் காலை அவர் தந்தையின் வீட்டிற்கு வந்திருந்ததாகவும், கைது செய்யப்பட்டபோது கடுமையான மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் தங்காலை கோட்ட தடயவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு (SOCO) அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து தங்காலை தலைமையகப் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாணவர்கள் முழுக் கை, முழுக் கால் ஆடையுடன் பாடசாலைக்கு வர அனுமதி
செய்திகள்

மாணவர்கள் முழுக் கை, முழுக் கால் ஆடையுடன் பாடசாலைக்கு வர அனுமதி

July 12, 2026
உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளில் இலங்கை 3ஆவது இடம்; ஆசியாவில் முதலிடம்
செய்திகள்

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளில் இலங்கை 3ஆவது இடம்; ஆசியாவில் முதலிடம்

July 12, 2026
அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு; மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்!
செய்திகள்

அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு; மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்!

July 12, 2026
நாட்டில் டெங்கு பாதிப்பு தீவிரம்; நோயாளர்கள் எண்ணிக்கை 68 ஆயிரத்தைத் தாண்டியது!
செய்திகள்

நாட்டில் டெங்கு பாதிப்பு தீவிரம்; நோயாளர்கள் எண்ணிக்கை 68 ஆயிரத்தைத் தாண்டியது!

July 12, 2026
வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4,333 ஆக உயர்வு; ஆயிரக்கணக்கானோர் இன்னும் மாயம்!
செய்திகள்

வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4,333 ஆக உயர்வு; ஆயிரக்கணக்கானோர் இன்னும் மாயம்!

July 12, 2026
கதிர்காம பாதயாத்திரையில்  ஒரு உயிரிழப்பு; பாணமையில் யாத்திரிகர் திடீர் மரணம்!
செய்திகள்

கதிர்காம பாதயாத்திரையில் ஒரு உயிரிழப்பு; பாணமையில் யாத்திரிகர் திடீர் மரணம்!

July 12, 2026
Next Post
மாணவர்கள் முழுக் கை, முழுக் கால் ஆடையுடன் பாடசாலைக்கு வர அனுமதி

மாணவர்கள் முழுக் கை, முழுக் கால் ஆடையுடன் பாடசாலைக்கு வர அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.