Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேர்தலில் தோல்வியுற்றிருந்தாலும் நிழல் பாராளுமன்ற உறுப்பினராக எமது மக்களுக்காக நான் செயற்படுவேன்; அருண்மொழிவர்மன் தம்பிமுத்து

தேர்தலில் தோல்வியுற்றிருந்தாலும் நிழல் பாராளுமன்ற உறுப்பினராக எமது மக்களுக்காக நான் செயற்படுவேன்; அருண்மொழிவர்மன் தம்பிமுத்து

2 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்றிருந்தாலும் நிழல் பாராளுமன்ற உறுப்பினராக எனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வேன் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண்மொழிவர்மன் தம்பிமுத்து நேற்று (17) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியைஆதரித்து வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தற்போது இலங்கையில் நாடாளுமன்றத்தில் புதிய அரசாங்கம் பதவியேற்க இருக்கின்றது. அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் அவரது தேசிய மக்கள் சக்திக்கும் மூன்றில் இரண்டு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் முழுமையாக பாவித்து இந்த நாட்டிலே தீர்க்கப்படாத பல விடயங்களை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதை அவர்கள் கையில் எடுக்க வேண்டும் என்ற விடயத்தையும் நான் அவர்களுக்கு வலியுறுத்த கடமைப்பட்டிருக்கின்றேன்,

அதேபோல் எமது ஆதரவாளர்களர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியாது 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புத்தெழிற்சிபெற வேண்டும் என்று கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். எமது கட்சியின் ஆதரவாளர்களுக்கும் நான் கூற விரும்பும் விடயம் என்னவென்றால் எமது செயல்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் தமிழர் விடுதலை கூட்டணியானது தற்போது எனக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலையில் இருந்து முழுமையாக புத்தெழிற்சிபெறும் என்ற முழுமையான நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

அதற்கான வேலைத் திட்டங்களில் நான் முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றேன். எமது ஆதரவாளர்களுக்கு நான் கூறியிருக்கின்றேன், மட்டக்களப்பிலே மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மட்டக்களப்பில் ஒரு புதிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றேன். அதன் அடிப்படையில் நாங்கள் செயற்பாடுகளையும் முன்னெடுக்கவிருக்கின்றோம்.

இன்று மட்டக்களப்பில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல கடமைகள் இருக்கின்றன, மட்டக்களப்பு மாவட்டத்தில் தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இருக்கின்றன, நிச்சயமாக எமக்கான நிலப் பிரச்சினை இருக்கின்றது. இன்னும்சொல்ல வேண்டுமென்றால் மேச்சல் தரை பிரச்சனை இருக்கின்றது, வளங்கள் சூறையாடப்படும் நிலைமை காணப்பட்டு வந்திருக்கின்றது.

இதற்கெல்லாம் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். நானும் ஒரு நிழல் பாராளுமன்ற உறுப்பினராக இந்த மாவட்டத்திலே தொடர்ச்சியாக எனது நிலைப்பாட்டை, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வேன் என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு
செய்திகள்

வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு

June 23, 2026
விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!
செய்திகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

June 23, 2026
வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்

June 23, 2026
எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!
செய்திகள்

எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!

June 23, 2026
செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணிக்கும் பாதயாத்திரை மட்டு மாமாங்கத்தை வந்தடைந்தது
செய்திகள்

செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணிக்கும் பாதயாத்திரை மட்டு மாமாங்கத்தை வந்தடைந்தது

June 23, 2026
அரச சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரச சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

June 23, 2026
Next Post
நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணைப் பிரிவு கலைப்பு

நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணைப் பிரிவு கலைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.