Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முஸ்லிம் சமூகத்தையும் அமைச்சரவையினுள் உள்வாங்குங்கள்; ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

முஸ்லிம் சமூகத்தையும் அமைச்சரவையினுள் உள்வாங்குங்கள்; ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரையும் உள்வாங்குமாறு தேசிய முஸ்லிம் கவுன்ஸில், கிழக்கு முஸ்லிம் பேரவை, முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஆகிய அமைப்புகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஜனாதிபதி அனுரா குமார திஸ்ஸநாயக நியமித்த அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்தில் இருந்து எவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நிகழ்ந்துள்ள இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,

2024.11.14 ஆம் திகதி நடைபெற்ற 10 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் நீங்கள் தலைமை வகிக்கும் அணி -அனைத்து மக்களினதும் ஆதரவுடன் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து உங்களால் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையின் எதிர்காலச் செயற்பாடுகள் சகல வழிகளிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு, இந்த நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காகப் பணியாற்றத் கூடிய அமைச்சரவையாக மாற வேண்டும் என நாங்கள் மனதாரப் பிரார்த்திக்கிறோம்.

இந்த அமைச்சரவையில் எமது முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியொருவர் இல்லாதிருப்பதனால் எமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கு உள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது என்பதனை கவலையுடன் முன்வைக்கிறோம்.

ஜனாதிபதி அவர்கள் இந்த விடயத்தில் கரிசனை காட்டி துரிதமாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்காக எமது சமூகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் – எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மொங்கோலியாவில் 3000-ஐ தாண்டிய தட்டம்மை பாதிப்புகள்
உலக செய்திகள்

மொங்கோலியாவில் 3000-ஐ தாண்டிய தட்டம்மை பாதிப்புகள்

May 25, 2025
முதன்முறையாக ஒரே நேரத்தில் 3,147 தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
செய்திகள்

முதன்முறையாக ஒரே நேரத்தில் 3,147 தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

May 25, 2025
மட்டக்களப்பில் உடைந்து 2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; பொதுமக்கள் சீற்றம்
செய்திகள்

மட்டக்களப்பில் உடைந்து 2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; பொதுமக்கள் சீற்றம்

May 24, 2025
இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

May 24, 2025
நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்
செய்திகள்

நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

May 24, 2025
இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்
செய்திகள்

இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்

May 24, 2025
Next Post
குடிசன மதிப்பீட்டுக்கு வரும் அதிகாரிகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம்

குடிசன மதிப்பீட்டுக்கு வரும் அதிகாரிகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.