Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பகவத் கீதையில் உள்ள வாசகத்தை குறிப்பிட்ட ஓபன்ஹெய்மர்!

பகவத் கீதையில் உள்ள வாசகத்தை குறிப்பிட்ட ஓபன்ஹெய்மர்!

2 years ago
in சினிமா, முக்கிய செய்திகள்

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஓபன்ஹெய்மர் படம் ஜூலை 21ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அதன் ப்ரீமியர் காட்சிகளுக்காக அந்த படத்தில் நடித்த சிலியன் மர்பி, ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் மேட் டேமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

மெமென்டோ, இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டெனெட் என புரியாத புதிர்களை கொண்ட படங்களை புதிர் போட்டியே இயக்கி வரும் புத்திசாலி இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் தற்போது அணுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய பகுதிகளை படமாக இயக்கி உள்ளார்.

இந்த படத்துக்காக ஹீரோ சிலியன் மர்பி பகவத் கீதையை படித்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய நிலையில், அந்த புத்தகத்தின் மகத்துவங்களையும் அவர் அடுக்கி உள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட அணு ஆயுதத்தை கண்டுபிடித்ததில் முக்கிய பங்காற்றிய இயற்பியலாளர் ராபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி உள்ள ஓபன்ஹெய்மர் படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

இந்த வாரம் வெளியாகும் ஹாலிவுட் படங்களிலேயே ஓபன்ஹெய்மர் மற்றும் பார்பி படத்துக்கு இடையே பெரிய போட்டியே வெடித்துள்ளது. எப்படி இருந்தாலும், கிறிஸ்டோபர் நோலனின் படத்தை பார்க்கவும் சிஜி காட்சிகளே இல்லாமல் ரியல் அணுகுண்டையே வெடிக்கச் செய்து படமாக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அணுகுண்டு வெடிப்பை காணவும் அதன் ஆபத்தை உணரவும் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

1940ம் ஆண்டு முதல் அணுகுண்டு சோதனை நடந்த உடனே பகவத் கீதையில் உள்ள வாசகத்தை ஓபன்ஹெய்மர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஓபன்ஹெய்மராக நடிக்க வேண்டிய நிலையில், நடிகர் சிலின் மர்பியும் தானும் பகவத் கீதையை படித்து அந்த கதாபாத்திரத்துக்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டேன் எனக் கூறியுள்ளார். பகவத் கீதை ஒரு அழகான பொக்கிஷம், அதில் வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன என சிலின் மர்பி பேசியுள்ளார். ஓபன்ஹெய்மர் தீவிர பகவத் கீதை வாசிப்பாளர் என்பதால், அந்த கதாபாத்திரத்துக்காக பகவத் கீதையை படித்து தன்னை மெருகேற்றியிருக்கிறார் சிலின் மர்பி.

தொடர்புடையசெய்திகள்

பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த மாணவன்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
செய்திகள்

பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த மாணவன்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

May 15, 2025
துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்
உலக செய்திகள்

துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்

May 15, 2025
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது தூதுவரின் முக்கிய பொறுப்பாகும்; ஜனாதிபதி
செய்திகள்

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது தூதுவரின் முக்கிய பொறுப்பாகும்; ஜனாதிபதி

May 15, 2025
இரு மாணவர்களிடையே கை கலப்பில் முடிந்த காதல் பிரச்சனை; திருமலையில் சம்பவம்
செய்திகள்

இரு மாணவர்களிடையே கை கலப்பில் முடிந்த காதல் பிரச்சனை; திருமலையில் சம்பவம்

May 15, 2025
மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா
செய்திகள்

மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா

May 15, 2025
ஹர்ஷன் டி சில்வா கைது!
செய்திகள்

ஹர்ஷன் டி சில்வா கைது!

May 15, 2025
Next Post
ஸ்மார்ட் வாட்ச் தெரியும்! ஸ்மார்ட் ரிங் தெரியுமா?

ஸ்மார்ட் வாட்ச் தெரியும்! ஸ்மார்ட் ரிங் தெரியுமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.