Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாடாளுமன்ற அதிகாரிகளிடம் விசாரனைகளை ஆரம்பித்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம்

நாடாளுமன்ற அதிகாரிகளிடம் விசாரனைகளை ஆரம்பித்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம்

5 months ago
in செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று (21) நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்து மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் தமது பெயருக்கு முன்னதாக கலாநிதி என்ற பட்டம் இடப்பட்டிருந்தமை தொடர்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்துள்ளனர்.

இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தை, அரசியலுக்காகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்ற அதிகாரிகளிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தலைமையில் சதிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவின் கணவரான ஹரிகுப்த ரோஹனதீரவே கோட்டாபய ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகராகச் செயற்பட்டார்.

எனவே, இந்த சதியின் பின்னணியில் ராஜபக்ஷக்களே உள்ளனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரை கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பயமுறுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தொலைபேசி மூலம் இலஞ்சம் வங்க முற்பட்ட வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

தொலைபேசி மூலம் இலஞ்சம் வங்க முற்பட்ட வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது

May 30, 2025
ஊழல் தொடர்பில் 20 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது துரிதப்படுத்தப்படும் விசாரணை
செய்திகள்

ஊழல் தொடர்பில் 20 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது துரிதப்படுத்தப்படும் விசாரணை

May 30, 2025
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான அரசின் விசாரணைகளில் நம்பிக்கையடைந்துள்ள பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான அரசின் விசாரணைகளில் நம்பிக்கையடைந்துள்ள பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

May 30, 2025
பெயர் பட்டியலை அறிவிப்பதற்கான கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு; தேர்தல்கள் ஆணைக்குழு
செய்திகள்

பெயர் பட்டியலை அறிவிப்பதற்கான கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு; தேர்தல்கள் ஆணைக்குழு

May 30, 2025
அரச பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்பதனை தடை செய்ய வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்
செய்திகள்

அரச பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்பதனை தடை செய்ய வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்

May 30, 2025
வொஷிங்டனிலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயம்
உலக செய்திகள்

வொஷிங்டனிலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயம்

May 30, 2025
Next Post
இலங்கையில் அடுத்த வருடம் பலரை கொலைசெய்யத் திட்டம்

இலங்கையில் அடுத்த வருடம் பலரை கொலைசெய்யத் திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.