அமெரிக்காவின் வொஷிங்டனிலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வொஷிங்டனின் தகோமா புறநகர் பகுதியிலுள்ள ஹேரி டோட் பூங்காவில் நேற்று முன்தினம் ( 28) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த மீட்புப் படையினர், உடனடியாக படுகாயமடைந்தோரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.. அவர்களில் 3 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து அந்நாட்டு பொலிஸார் இதனை யார் நடத்தியது? படுகாயமடைந்தவர்கள் குறிவைக்கப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.