Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாநகர சபையினை முதன்மையானதாக மாற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்; புதிய ஆணையாளர் தனஞ்செயன்

மட்டக்களப்பு மாநகர சபையினை முதன்மையானதாக மாற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்; புதிய ஆணையாளர் தனஞ்செயன்

5 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் நாட்டிலும், மாகாணங்களிலும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றது. அந்த அடிப்படையில் இந்த மாநகரத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும், அர்ப்பணிப்புமிக்க சேவையினை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக கடமையேற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தெரிவித்தார்.

புதிய ஆண்டில் அரசாங்க உத்தியோகத்தர்கள் கடமையேற்கும் நிகழ்வும், கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வும் நேற்றைய தினம் (01) நாடெங்கிலும் உள்ள அரச திணைக்களங்களில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையில் நேற்று காலை புதிய ஆணையாளர் புதுவருடத்தில் கடமையேற்றதுடன், புதுவருட அரச ஊழியர்கள் கடமையேற்றும் நிகழ்வும், கிளின் ஸ்ரீலங்கா திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக கடமையேற்க வருகைதந்த என்.தனஞ்செயன் மாநகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களினால் வரவேற்கப்பட்டதுடன் மாநகரசபையில் உள்ள செல்வ கணபதி ஆலயத்தில் விசேட புத்தாண்டு பூஜையிலும் கலந்துகொண்டார்.

அதனை தொடர்ந்து அரச ஊழியர்கள் புத்தாண்டில் கடமையேற்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் இதன்போது அரச கடமை உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

கடமையேற்கும் நிகழ்வினை தொடர்ந்து தேசிய நிகழ்வாக நடைபெறும் கிளின் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்ட நிகழ்வு நேரடி ஒளிபரப்பு உத்தியோகத்தர்களுக்கு காண்பிக்கப்பட்டதுடன், குறித்த நிகழ்விலும் இணைந்திருந்தனர்.

இந்த நிகழ்வினை தொடர்ந்து புதிய மாநகர ஆணையாளராக தனஞ்செயன் கடமையேற்றார்.

இந்த நிகழ்வில் மாநகரசபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த புதிய ஆணையாளர்,

பொதுமக்கள் பல தேவைகளுக்காக மாநகரசபைக்கு வருகின்றனர். அவர்களை இன்முகத்துடன் வரவேற்று சிறப்பான சேவையினை வழங்கவேண்டியது உத்தியோகத்தர்களின் கடமையாகும்.

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றபின்னர் நாட்டிலும் மாகாணங்களிலும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றது. அந்த அடிப்படையில் இந்த மாநகரத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்பதுடன் அர்ப்பணிப்புமிக்க சேவையினையும் பொதுமக்களுக்கு வழங்கவேண்டும்.

அரச உத்தியோகத்தர்களை பொறுத்தவரையில் நீதியானதும் நேர்மையானதும் பக்கசார்பற்றதும் இலஞ்சம், ஊழல், தரகுப்பணம் பெறும் நிலைமைகள் அற்ற மாநகரசபையாக இதனை கட்டியெழுப்பி, மக்களுக்கான சேவையினை வழங்கவேண்டும்.

சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்து இலங்கையில் முதன்மையானதும் முன்னுதாரணமான மாநகரசபையாகவும் மட்டக்களப்பு மாநகரசபையினை மாற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பு தேவையாகும்.

கழிவகற்றும் செயற்பாடுகளில் மக்களின் ஒத்துழைப்பினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். கடந்த காலத்தில் வீதிகளில் குப்பைகளை வீசிச்செல்லும் நிலைமையும் காணப்படுகின்றது. வரியிறுப்பாளர்கள் இந்த கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். எதிர்காலத்தில் குப்பைகளை சேகரிக்கும் பணிகள் குறித்த நாளில் குறித்த நேரத்தில் முன்னெடுக்கப்படும் என்பதை நான் உறுதிப்படுத்துவேண். அந்தவேளையில் குப்பைகளை தரம்பிரித்து வழங்கவேண்டும்.

மட்டக்களப்பு மாநகரசபை அதிகளவான சுற்றுலாப்பயணிகள், வெளிநாட்டவர்கள் வந்துசெல்லும் இடம். அவர்கள் விரும்பும் வகையில் அழகான, பசுமையான மாநகரசபையாக மாற்றுவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும். அதேபோன்று பொதுமக்கள் தங்களது வரிகளை உரிய காலப்பகுதிக்குள் செலுத்தவேண்டும். மக்கள் வரிநிலுவைகளை செலுத்தி மாநகரசபையின் வருமானத்தினை அதிகரிக்கும்போது எந்த ஊழல்களும் இல்லாமல் அந்த நிதி மீண்டும் மக்களுக்கான சேவையாக வழங்கப்படும் என்பதை நான் ஆணையாளர் என்ற வகையில் உறுதியளிக்கின்றேன்- என்றார்.

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇👇 www.battinaatham.net #srilanka#battinaatham #batticaloa

♬ original sound – battinaatham – battinaatham
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி
செய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி

June 6, 2025
ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை
செய்திகள்

ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை

June 6, 2025
இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு
செய்திகள்

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு

June 6, 2025
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

June 6, 2025
உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
செய்திகள்

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு

June 6, 2025
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்

June 6, 2025
Next Post
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மல்லாவி நகரில் கையெழுத்து வேட்டை

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மல்லாவி நகரில் கையெழுத்து வேட்டை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.