Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறீதரன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கும் அரசு

சிறீதரன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கும் அரசு

5 months ago
in செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளோம் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சிவஞானம் சிறீதரன் விமான நிலையத்தில் எதிர்கொண்ட அசௌகரியத்துக்கு வருத்தமடைகின்றோம் எனவும் இந்தச் சம்பவத்துக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும், தலையீடும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற அமர்வின்போது சிவஞானம் சிறீதரன் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்த போது அதற்குப் பதிலளிக்கும் போதே சபை முதல்வர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினை குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். இந்த விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விமான நிலையத் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

அத்துடன் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கும் இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு அறிவுறுத்தியுள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்வைத்த விடயங்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துடன் தொடர்புடையது.

ஆகவே, இந்த விடயம் நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் குழுவில் விசாரணைக்குட்படுத்தப்படுமாயின் திணைக்களத்தை அழைக்க முடியும்.

இந்தச் சம்பவத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிடுவது அடிப்படையற்றது. இவர் நாட்டுக்கு திரும்பி வருகையில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை.

ஆகவே, இந்த விடயத்தில் அரசின் தலையீடு ஏதும் கிடையாது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அபிலாஷையும், கொள்கையும் அரசுக்குக் கிடையாது.

இருப்பினும் மாற்றீடாக புதிய சட்டம் இயற்றப்படும் வரை இந்தச் சட்டத்தைக் கவனமான முறையில் பொதுப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு நடைமுறைப்படுத்த நேரிடும்’’ என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காஸாவில் உடனடி போர் நிறுத்தம்; மனிதாபிமான உதவிக்கு ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

காஸாவில் உடனடி போர் நிறுத்தம்; மனிதாபிமான உதவிக்கு ஐ.நா. தீர்மானம்

June 14, 2025
ஒக்டோபரில் சீன சந்தைக்கு அறிமுகமாகிறது பறக்கும் கார்
உலக செய்திகள்

ஒக்டோபரில் சீன சந்தைக்கு அறிமுகமாகிறது பறக்கும் கார்

June 14, 2025
5 கோடியே 50 இலட்சம் பெறுமதியான 673 மதுபான போத்தல்கள் மற்றும் 75 கிலோ ஏலக்காய் தொகைஎன்பன மீட்பு
செய்திகள்

5 கோடியே 50 இலட்சம் பெறுமதியான 673 மதுபான போத்தல்கள் மற்றும் 75 கிலோ ஏலக்காய் தொகைஎன்பன மீட்பு

June 14, 2025
அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மறந்து விட்டது; பேராயர் மல்கம் ரஞ்சித்
செய்திகள்

அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மறந்து விட்டது; பேராயர் மல்கம் ரஞ்சித்

June 14, 2025
“பூஜா பூமி” என்று புல்மோட்டை காணிகளை பிடிக்கும் தேரர்; ஜனாஸா நல்லடக்கம் செய்யவிடாமல் குழப்பம்
செய்திகள்

“பூஜா பூமி” என்று புல்மோட்டை காணிகளை பிடிக்கும் தேரர்; ஜனாஸா நல்லடக்கம் செய்யவிடாமல் குழப்பம்

June 13, 2025
உலகப் பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையை நோக்கிச் செல்கிறது என உலக வங்கி சுட்டிக்காட்டு
செய்திகள்

உலகப் பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையை நோக்கிச் செல்கிறது என உலக வங்கி சுட்டிக்காட்டு

June 13, 2025
Next Post
யாழில் இளைஞனை நிர்வாணப்படுத்தி தாய்க்கு முன் தாக்குதல்; 20 பேரை தேடும் பொலிஸார்

யாழில் இளைஞனை நிர்வாணப்படுத்தி தாய்க்கு முன் தாக்குதல்; 20 பேரை தேடும் பொலிஸார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.