Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆட்டோ சாரதியை நிர்வாணப்படுத்தி சித்திரவதை; பொலிஸார் மீது முறைப்பாடு

ஆட்டோ சாரதியை நிர்வாணப்படுத்தி சித்திரவதை; பொலிஸார் மீது முறைப்பாடு

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தெமட்டகொட பொலிஸார் முச்சக்கர வண்டிசாரதி ஒருவரை தடுத்துவைத்து நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தமை தொடர்பில் தெமட்டகொட பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் சட்ட அறிவிப்பை விடுத்துள்ளது.

தெமட்டகொட பொலிஸார் முச்சக்கரவண்டி சாரதியொருவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் 7 நாட்கள் தடுத்துவைத்திருந்தனர். அதுமட்டுமல்லாது அவரை நிர்வாணப்படுத்தி தாக்கினார்கள் என்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தனது கட்சிக்காரரான முச்சக்கர வண்டி சாரதி தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பயணி ஒருவரை ஏற்றுவதற்காக தெமட்டகொடவிற்கு சென்றார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு சீருடையின்றி வந்தசிலர் துப்பாக்கியை காண்பித்து அவரை அச்சுறுத்தினார்கள்,பின்னர் அவரை தெமட்டகொட பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று, குப்பையொன்றில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் குறித்து விசாரணை செய்தார்கள், மோசமாக தாக்கினார்கள் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 2ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் முச்சக்கரவண்டி சாரதியை 9ம் திகதியே பொலிஸார் அந்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

தாம் தாக்கியதை மறைத்து முச்சக்கரவண்டி சாரதி வாகனமொன்றிலிருந்து கீழே விழுந்துவிட்டார் என பொய்யான தகவலை வழங்கியுள்ளனர். பொலிஸாரின் தகவலை அடிப்படையாக வைத்து நீதிமன்றம் அந்த நபரை விடுதலை செய்துள்ளது.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 18 ம் திகதிவரை சிகிச்சை பெற்றுள்ளார். தங்களிற்கு எதிராக முறைப்பாடு செய்தால் அந்த நபரின் வாகனத்தில் போதைப்பொருளை வைத்துவிட்டு குற்றச்சாட்டை பதிவு செய்வோம் என பொலிஸார் எச்சரித்துள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது சகோதரரனின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்டவரின் சகோதரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயிரெடுக்கும் விஷம் எனும் தொணிப் பொருளில் விழிப்புணர்வு நாடக ஆற்றுகை நிகழ்வு
செய்திகள்

உயிரெடுக்கும் விஷம் எனும் தொணிப் பொருளில் விழிப்புணர்வு நாடக ஆற்றுகை நிகழ்வு

June 7, 2025
தலைக்கவசம் அணியாதோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; காத்தான்குடி பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தலைக்கவசம் அணியாதோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; காத்தான்குடி பொலிஸ் எச்சரிக்கை

June 7, 2025
அருவிப் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் “அரச காணிகளில் வசிப்பவர்களுக்கான உரிமைகள் மற்றும் சட்ட வழிமுறைகள்” தொடர்பான விழிப்புணர்வு செயலமர்
செய்திகள்

அருவிப் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் “அரச காணிகளில் வசிப்பவர்களுக்கான உரிமைகள் மற்றும் சட்ட வழிமுறைகள்” தொடர்பான விழிப்புணர்வு செயலமர்

June 7, 2025
உலக வாழ் முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாள் இன்று
செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாள் இன்று

June 7, 2025
நல்லூரில் பற்றியெரிந்த இணுவில் காரைக்கால் குப்பை மேடு
செய்திகள்

நல்லூரில் பற்றியெரிந்த இணுவில் காரைக்கால் குப்பை மேடு

June 7, 2025
குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு
செய்திகள்

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு

June 7, 2025
Next Post
அர்ஜூன் மகேந்திரனை அழைத்து வருவதில் சிக்கல்; ஜனாதிபதி அநுரகுமார

அர்ஜூன் மகேந்திரனை அழைத்து வருவதில் சிக்கல்; ஜனாதிபதி அநுரகுமார

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.