2006ஆம் ஆண்டு மூதூரில் இடம்பெற்ற ‘Action Against Hunger’ சர்வதேச அமைப்பின் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலைச் சம்பவத்தின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (08) சனிக்கிழமை மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, படுகொலை செய்யப்பட்ட 17 தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி, தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன், படுகொலை இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி நினைவஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ நேசன், வைத்தியர் ஸ்ரீநாத், வேலன் சுவாமிகள், இந்து மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும், பொதுமக்களும் இதில் கலந்துகொண்டு உயிரிழந்த 17 தன்னார்வத் தொண்டர்களை நினைவுகூர்ந்தனர்.







