Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாநகர சபையின் விசேட வேலைத்திட்டம்; சத்துருக்கொண்டானில் சிசிடிவி கேமரா

மட்டக்களப்பு மாநகர சபையின் விசேட வேலைத்திட்டம்; சத்துருக்கொண்டானில் சிசிடிவி கேமரா

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபையினை குப்பைக்கூழங்கள் அற்ற தூய்மையான மாநகர சபையாகவும், இலஞ்ச ஊழல்கள் அற்ற தூய்மையான மாநகரசபையாகவும் மாற்றும் வகையிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம், நாட்டினை தூய்மைப்படுத்தும் முகமாக ஆரம்பித்துள்ள கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணைவாக மட்டக்களப்பு மாநகரசபை இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

இதன் கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் இலஞ்சம், ஊழல் என்பனவற்றினை தடுக்கும் வகையில் மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயனின் எண்ணக்கருவில் உருவான இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்சயன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளரும் கிரான் பிரதேச செயலாளருமான சட்டத்தரணி க.சித்திரவேல் கலந்துகொண்டார்.

இதன்போது நீங்கள் இலஞ்சம், ஊழல், தரகுப்பணம் பெறாத அலுவலக வளாகத்தினுள் நுழைகின்றீர்கள், சட்டரீதியற்ற பணப்பரிமாற்றம் தடைசெய்யப்படுகின்றது. இலஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட முறைப்பாட்டு இலக்கம் கொண்ட பதாகை திறந்துவைக்கப்பட்டதுடன், ஆங்கில மொழிப் பதாகை நடப்பட்டது.

அதனை தொடர்ந்து மாநகரசபையின் சேவைகளை அறிந்துகொள்ளவும், அதன் சேவைகளைப்பெற்றுக்கொள்ளவும் மாநகரம் தொடர்பான தகவல்களைப்பெற்றுக்கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்ட இணையத்தளம் இதன்போது அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

அத்துடன் பொதுமக்கள் கழிவுகளை வீதிகளில் எரிவதை தடுக்கும் வகையிலும், அவ்வாறானவர்களை கண்டுபிடிப்பதற்காக மொபைல் சிசிடிவி கேமரா பொருத்தும் செயற்பாட்டுக்கு அமைவாக திருமலை வீதி சத்துருக்கொண்டானில் கேமரா பொருத்தப்பட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

Tags: BattinaathamnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை நாளை; 2 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றவுள்ளனர்!
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை நாளை; 2 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றவுள்ளனர்!

August 8, 2026
வத்தளையில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு; முக்கிய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!
செய்திகள்

வத்தளையில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு; முக்கிய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

August 8, 2026
பேசாலையில் புதர் பகுதியில் 41 வயதுடைய மீனவர் சடலமாக மீட்பு!
செய்திகள்

பேசாலையில் புதர் பகுதியில் 41 வயதுடைய மீனவர் சடலமாக மீட்பு!

August 8, 2026
இரத்மலானையில் ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுடன் 6 பேர் கைது!
செய்திகள்

இரத்மலானையில் ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுடன் 6 பேர் கைது!

August 8, 2026
செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
Next Post
மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.