Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
68 வருடங்களிற்கு முன்பு இன்றைய நாளில் திருமலை கொடுத்த முதல் பலி

68 வருடங்களிற்கு முன்பு இன்றைய நாளில் திருமலை கொடுத்த முதல் பலி

1 year ago
in செய்திகள்

தேசிய பயணப்போராட்டத்தின் முதல் களப்பலி திருமலை தந்த தியாகி தீரன் நடராசன் அன்று 22 வயதுஇளைஞன் தியாகி திருமலை நடராஜன் 68வது ஆண்டு நினைவு நாள்

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்காவினால் 08.02.1956ல் சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்களச் சட்டத்தால் இலங்கையில் தமிழ் மொழி இரண்டாம்பட்ச மொழியாக்கப்பட்டது.

04.02.1957 சிறிலங்காவின் ஒன்பதாம் சுதந்திர நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் பகிஸ்கரித்தனர்.

திருகோணமலையில் சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும், தேசப்பற்றும் நிரம்பிய தியாகி நடராஜன் என்ற 22 வயது இளைஞன் எவ்.ஜி.மனுவல் மற்றும் டீ. சில்வா என்ற சிப்பாயால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இச் சம்பவம் அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது. 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை (1957) பிற்பகல் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் சுமார் ஒரு மைல் நீளத்திற்கு இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

தெருநெடுகிலும் பெண்கள் கூடி நின்று கண்ணீர் வடித்தனர். திரு. நடராஜனின் பிரேதப் பெட்டியை திருமலை நகரசபைத் தலைவர் திரு. த. ஏகாம்பரம், திருவாளர்கள் வி.ஏ. கந்தையா, எம்.பி.என்.ஆர்.இராஜவரோதயம் எம்.பி., எம். தாமோதரம்பிள்ளை, சட்டத்தரணி துரைநாயகம், கப்டன், ஏ.ஸி.கனகசிங்கம் ஆகியோர் கையேந்தித் தூக்கிச் சென்று ஊர்வலத்தை ஆரம்பித்துவைத்தனர்.

பிரேத ஊர்வல ஏற்பாடுகளை எல்லாம் திரு. எம். இராமநாதன் கவனித்துக்கொண்டார்.தொண்டர்கள் சுமார் 50 மலர் வளையங்களைத் தாங்கிச் சென்றனர்.

கந்தளாய் மயானத்தில் திருமலை நடராஜன் அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நடராஜன் அவர்களை அடக்கம் செய்த இடத்தில் ஒரு ஞாபகார்த்த கட்டடத்தைக் கட்டி தமிழ் மொழியையும், கொடியையும் காக்க உயிர்நீத்த தியாகி நடராஜன் என்று பொறிக்க வேண்டும் என்று எல்லோராலும் அபிப்பிராயப்பட்டதனாலேயே நடராஜன் அவர்களது உடம் தகனம் செய்யப்படாமல் அடக்கம் செய்ய்பபட்டது என்று தெரியவருகிறது.

10.02.1957 இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் விடுதலை உணர்வுடன் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் முதல் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜன் அவர்களை இன்று 77 வது இலங்கை சுதந்திரம் அடைந்த நாளாக சொல்லிக்கொள்ளும் நிலையில் அன்னாரின் 68 வது ஆண்டு நினைவு நாள் என்பதை ஒவ்வொரு உணர்வுள்ள தமிழரும் ஒருகணம் நினைப்போம் அவரின் தியாகத்தை மதிப்போம்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
Next Post
மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.