Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் பொலிஸ் உயர் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி பண மோசடி; ஒருவர் கைது

மட்டக்களப்பில் பொலிஸ் உயர் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி பண மோசடி; ஒருவர் கைது

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பொலிஸ் உயர் அதிகாரிகளை தெரியும் என கூறி, வங்கி ஒன்றின் முகாமையாரிடம் 30 ஆயிரம் ரூபாவை வாங்கிய மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை மட்டக்களப்பு விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

“அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள வங்கி ஒன்றில் முகாமையாளராக கடமை யாற்றிவரும் ஒருவர், டின் – மீன் விற்பனை வியாபாரம் செய்வதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 29 இலச்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த வர்த்தக நடவடிக்கை செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதையடுத்து வழங்கிய பணத்தை வர்த்தகரிடம் மீள தருமாறு கோரியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பிரதேசத்திலுள்ள வங்கிக்கு சென்றுவந்த 21 வயதுடைய இளைஞனுக்கும் வங்கி முகாமையாருக்கும் இடையே நட்பு ஏற்பட்ட நிலையில் முகாமையாளர் தான் வர்த்தகம் செய்ய பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் அவருக்கு எதிராக மட்டக்களப்பு விசேட குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக இளைஞரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இளைஞன் தனக்கு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தெரியும். அவ்வாறே மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை தெரியும். நான் அவருடன் பேசி பணத்தை வாங்கிதருகின்றேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு 3 வீதம் பணம் வழங்கவேண்டும் என தெரிவித்துளளதுடன், முகாமையாளரை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு அழைத்து சென்று வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று வருவது போல பாசாங்கு செய்துள்ளார்.

இதன் பின்னர் முற்பணமக 30 ஆயிரம் ரூபாவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பெற்றுக்கொண்டதாகவும், அதனை தொடர்ந்து சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த இளைஞன் மிகுதி 20 ஆயிரம் ரூபா கொடுக்க வேண்டும் எனவும் முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

தான் குறித்த பொலிஸ் காரியாலயத்தின் முன் நிற்பதாக தெரிவித்து முகாமையாளரை அழைத்துள்ள நிலையில் அவர் 20 ஆயிரம் ரூபாவுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயதப்பகுதிக்கு சென்று இளைஞனை அங்கு விட்டுவிட்டு அவர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்து சம்பவத்தை விளக்கியுள்ளார்.

இதன்பின்னர் “நீங்கள் செய்த உதவிக்கு நன்றி மிகுதி பணம் கொண்டுவந்துள்ளேன்” என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவங்களை கேட்டு அறிந்த அவர், அப்படி ஒருவரையும் தெரியாது. நான் புதிதாக வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர் கைது செய்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் யார்?; கூட்டத்தில் இறுதி முடிவு
செய்திகள்

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் யார்?; கூட்டத்தில் இறுதி முடிவு

June 4, 2025
18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஐ.பி.எல் கிண்ணத்தை முதன்முறையாக வென்ற ஆர்.சி.பி!
செய்திகள்

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஐ.பி.எல் கிண்ணத்தை முதன்முறையாக வென்ற ஆர்.சி.பி!

June 4, 2025
வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி கேட்டு இறுதி ஊர்வலத்தின்போது போராட்டத்தில் குதித்த மக்கள்
செய்திகள்

வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி கேட்டு இறுதி ஊர்வலத்தின்போது போராட்டத்தில் குதித்த மக்கள்

June 4, 2025
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்
செய்திகள்

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்

June 4, 2025
திரிபோஷ உற்பத்திக்கு சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி
செய்திகள்

திரிபோஷ உற்பத்திக்கு சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

June 4, 2025
ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக அனலீனா பேர்பாக் தெரிவு
உலக செய்திகள்

ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக அனலீனா பேர்பாக் தெரிவு

June 4, 2025
Next Post
படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன்; அர்ச்சுனாவை எச்சரித்த ரிஸ்வி சாலி

படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன்; அர்ச்சுனாவை எச்சரித்த ரிஸ்வி சாலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.