Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன்; அர்ச்சுனாவை எச்சரித்த ரிஸ்வி சாலி

படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன்; அர்ச்சுனாவை எச்சரித்த ரிஸ்வி சாலி

4 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு குறித்து உரையாற்றினார்.

இதன்போது, லசந்த விக்ரமதுங்க தொடர்பில் உரையாற்ற போவது குறித்து, சஜித் பிரேமதாச முன்னரே அறிவிக்கவில்லை என ரிஸ்வி சாலி கூறினார்.

இதனையடுத்து, நான் பேசும் போது நடுவில் வர வேண்டாம் என பிரதி சபாநாயகரை சஜித் எச்சரித்தார்.

உடனே எழுந்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, சண்டியர்கள் நாடாளுமன்றத்திற்குள் வந்துள்ளதாக தெரிவித்தார். அத்துடன், பிரதி சபாநாயகரை அவமதித்தமைக்கு சஜித் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும், அர்ச்சுனா நேற்றையதினம் சபாநாயகரை ‘Shame’ என்ற வார்த்தையை உபயோகித்து அவமதித்ததாகவும், தயாசிறி ஜயசேகர ஆளும்கட்சி உறுப்பினர் மீது தவறான வார்த்தையை உபயோகித்ததாகவும் பிமல் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், அர்ச்சுனா சபையில் வாதத்தில் ஈடுபட்டார்.

இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர், நீங்கள் ஆசனத்தில் அமரவில்லை என்றால் படையினரின் உதவியுடன் உங்களை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவேன் என அர்ச்சுனாவை எச்சரித்தார்.

மேலும், நீங்கள் சபாநாயகரை அவமதித்துள்ளீர்கள், அப்போது சபாநாயகர் ஆசனத்தில் நான் இருந்திருந்தால் நிச்சயம் உங்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பேன் என தெரிவித்தார்.

இதேவேளை, தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச, தான் ‘நடுவில் வர வேண்டாம்’ எனக் கூறிய வார்த்தையை திரும்பப்பெறுவதாக குறிப்பிட்டதையடுத்து, சபை அமைதி நிலைக்கு வந்தது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஐ.பி.எல் கிண்ணத்தை முதன்முறையாக வென்ற ஆர்.சி.பி!
செய்திகள்

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஐ.பி.எல் கிண்ணத்தை முதன்முறையாக வென்ற ஆர்.சி.பி!

June 4, 2025
வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி கேட்டு இறுதி ஊர்வலத்தின்போது போராட்டத்தில் குதித்த மக்கள்
செய்திகள்

வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி கேட்டு இறுதி ஊர்வலத்தின்போது போராட்டத்தில் குதித்த மக்கள்

June 4, 2025
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்
செய்திகள்

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்

June 4, 2025
திரிபோஷ உற்பத்திக்கு சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி
செய்திகள்

திரிபோஷ உற்பத்திக்கு சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

June 4, 2025
ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக அனலீனா பேர்பாக் தெரிவு
உலக செய்திகள்

ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக அனலீனா பேர்பாக் தெரிவு

June 4, 2025
இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்
செய்திகள்

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்

June 4, 2025
Next Post
விவசாயிகளின் கஷ்டங்கள் என்ன என்பதை கவனத்தில்கொள்ளாது விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அதிகாரசபையின் செயலாளர்

விவசாயிகளின் கஷ்டங்கள் என்ன என்பதை கவனத்தில்கொள்ளாது விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அதிகாரசபையின் செயலாளர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.