Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியருக்கு எதிராக 29 மாணவிகள் சாட்சி!

மட்டு பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியருக்கு எதிராக 29 மாணவிகள் சாட்சி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளை பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசேட விசாரணைக்கு 29 மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் முன்னிலையாகி சாட்சியளித்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை (31.07.2023) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர் சதாத் முன்னிலையில் வழக்கு எடுக்கப்பட்ட போது மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் முன்னிலையாகி மூடிய நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட ஆசிரியரை அடையாளம் காட்டியதையடுத்து ஏனைய சாட்சிகளை எதிர்வரும் 2 ம் திகதி முன்னிலைமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் ஆங்கில பாடம் கற்பித்து வந்த 55 வயதுடைய ஆங்கில ஆசிரியர் ஒருவர் கடந்த 2019 ம் ஒக்டோபர் 19 ம் திகதி 19ம் அங்கு கல்வி கற்று வந்த 7 ம் வகுப்பு மாணிகளின் வகுப்பறையில் கற்பிக்க சென்ற நிலையில் மாணவிகள் சிலரிடம் தொடர்ந்து பாலியல் சேட்டை மற்றும் தகாதவார்த்தை பிரயோகம் போன்ற செயற்பாட்டில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பொலிஸ் பிரிவில் பாதிக்கப்பட்ட மாணவிகள் செய்த முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அவரை கைது அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலின் பின்னர் அவர் நீதிமன்ற பிணையில் வெளி வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கு கடந்த 3 வருடங்களுக்கு மேலாக மேலதிக விசாரணையின்றி இருந்து வந்துள்ள வழக்கை விசேட விசாரணை எடுத்து விசாரணை செய்யுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டு சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை பிறப்பித்தார்.

குறித்த வழக்கு விசேட விசாரணைக்காக நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்டதையடுத்து அங்கு குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர், அவருக்கு எதிராக சாட்சியப்பதற்காக 29 மாணவிகள் மற்றும் பாடசாலை ஆசிரியைகள், அப்போது கடமையாற்றிய அதிபர் உட்பட 40 பேர் சாட்சியமளிக்க முன்னிலையாகியிருந்தனர்.

இதன் போது ஆசிரியர் சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகாததையடுத்து சாட்சிகளை சாட்சியமளிக்க ஏற்பாட்டையடுத்து திறந்த நீதிமன்லில் இருந்து வழக்காளிகள் சாட்சிகள் தவிர்ந்த ஏனைய அனைவரையும் வெளியேறுமாறு உத்தரவிட்டு மூடிய நீதிமன்றில் 3 மாணவிகள் ஒருஆசிரியர் உட்பட 4 பேர் சாட்சியமளித்தனர்.

அதில் சாட்சியமளித்த 3 மாணவிகள் தற்போது சாதாரண கா.பொ.தரத்தில் கல்வி கற்று வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் அந்த கால பகுதியில் மாணவிகளின் முதுகில் கையால் அடிப்பது மற்றும் தகாதவார்தை பிரயோகம் கையடக்க தொலைபேசியில் ஆபாசபடங்களை காண்பிப்பது உடலில் தொட்டு பேசி பாலியல் சேட்டை விடுத்துள்ளதாகவும் இது தொடர்பாக வகுப்பாசிரியரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சாட்சியமளித்ததுடன் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை அடையாளம் காட்டினர்.

இதனை தொடர்ந்து வகுப்பறை ஆசிரியர் சாட்சியளிக்கும் போது அந்த கால பகுதியில் குறித்த வகுப்பறை ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ள போது மாணவிகள் ஆங்கில ஆசிரியர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு செய்வதாகவும் கையால் முதுகில் அடிப்பதாகவும் வாடி போடி என பேசுவதாகவும் அவரை மாற்றுமாறும் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அதனை தொடர்ந்து அவர் கையால் அடிக்க கூடாது என பிரம்பு வாங்கி கொடுத்தும் அவர் கையால் அடித்துள்ளதாகவும் இது தொடர்பாக பிரதி அதிபரிடம் முறைப்பாடு செய்த நிலையில் அதிபர் என்னிடம் விசாரித்த போது நடந்தவைகளை தெரிவித்ததையடுத்து பாடசாலை ஆசிரியர் ஒழுக்க குழுவைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் குறித்த வகுப்பறைக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை செய்து அறிக்கை தயாரித்து சென்றனர் என சாட்சியளித்து அசிரியரை அடையாளம் காட்டினர்.

சாட்சிகள் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக குறித்த ஆசிரியரிடம் குறுக்கு விசாரணை செய்த போது அதற்கு அவர் எதுவித பதிலும் அளிக்காது மௌனமாக இருந்துள்ள நிலையில் ஏனைய சாட்சிகள் எதிர்வரும் 2ம் திகதி சாட்சியமளிக்க நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக இடம்பெறும் என அறித்ததையடுத்து மூடிய நீதிமன்றம் கலைந்தது.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு
உலக செய்திகள்

அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு

June 11, 2025
பலத்த ம​ழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

பலத்த ம​ழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

June 11, 2025
ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு
செய்திகள்

ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு

June 11, 2025
தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் இலங்கை இளைஞன் கைது
உலக செய்திகள்

தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் இலங்கை இளைஞன் கைது

June 11, 2025
இறந்து 8 நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்ற ஆச்சரியம்; பெண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்
உலக செய்திகள்

இறந்து 8 நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்ற ஆச்சரியம்; பெண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

June 11, 2025
அமெரிக்க பொது நூலக வாகன நிறுத்தத்தில் தீ விபத்து
உலக செய்திகள்

அமெரிக்க பொது நூலக வாகன நிறுத்தத்தில் தீ விபத்து

June 11, 2025
Next Post
சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் மீண்டுமொரு பிக்கு கைது !

சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் மீண்டுமொரு பிக்கு கைது !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.