Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாலிபான்களுடன் இலங்கை அரசு முக்கிய சந்திப்பு!

தாலிபான்களுடன் இலங்கை அரசு முக்கிய சந்திப்பு!

3 years ago
in செய்திகள்

இந்தோனேஷியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசின் துணை செய்தித் தொடர்பாளரும் வெளியுறவு மக்கள் தொடர்பாடல் உதவிப் பணிப்பாளருமான ஹாபிஸ் ஷியா ஹமட்டுடன் இந்தோனேஷியாவில் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இந்தச் சந்திப்பு கடந்த மாதம் 14ஆம் திகதி நடை
பெற்றுள்ளது.ஹாபிஸ் ஷியா ஹமட் இந்தோனேஷியாவுக்கு விஜய மொன்றை மேற்கொண்டிருந்த
சந்தர்ப்பத்தில் இலங்கை, சிங்கப்பூர், பங்களாதேஷ் உட்பட அந்நாட்டில் உள்ள சில முக்கிய
இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இலங்கை சார்பில் வைஸ் அட்மிரல் ஜெய நாத் கொலம்பகேயும் கலந்து கொண்டுள்ளார். என்றாலும், இந்தோனேஷியாவில் உள்ள இலங்கைத் தூதரகரம் இந்தச்சந்திப்பு குறித்து எவ்வித தகவல்களையும் பகிர்ந்திருக்கவில்லை.இந்நிலையில், ருவிட்டர் பதிவொன்றின் ஊடாக ஹாபிஸ்ஷியா ஹமட் சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளதுடன், புகைப்படமொன்றையும் வெளியிட்டுள்ளார்.

வைஸ் அட்மிரல் கொலம்பகே, முன்னாள் கடற்படைத்தளபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியிருந்தார்.தாலிபான் வெளியிட்டுள்ள சந்திப்பு குறித்த புகைப்படத்தில் வைஸ் அட்மிரல் கொலம்பகே வுக்கு பின்னால் இலங்கை கொடி இருக்கின்றமை குறித்து சர்வதேச அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் நிர்வாகத்தை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்பதுடன், அட்மிரல் கொலம் பகே ஆப்கானிஸ்தான் தூதுக்குழுவை சந்திப்பதற்கு கொழும்பிடம் அனுமதி பெறவில்லை என வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானுடன் இலங்கை எந்த உத்தியோக பூர்வ சந்திப்புகளை நடத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஓகஸ்ட் 15, 2021அன்று தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத்
தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் காபூலில் உள்ள இலங்கை தூதரகத்தின் பணிகளை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டிருந்தது.இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் கடந்த மே 27, 2002 அன்று இலங்கையை விட்டு வெளியேறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

August 3, 2026
மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!
செய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

August 3, 2026
கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!
செய்திகள்

கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!

August 3, 2026
டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

August 3, 2026
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி
செய்திகள்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி

August 3, 2026
நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை

August 3, 2026
Next Post
அரச ஊழியர்களுக்கான விசேட சுற்றறிக்கை!

அரச ஊழியர்களுக்கான விசேட சுற்றறிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.