Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“சுய நிர்ணயத்திற்கான மாற்றத்தின் முகவர்களாக பழங்குடியின் இளைஞர்கள்”; வாகரையில் நேற்று பழங்குடிகள் தினம்!

“சுய நிர்ணயத்திற்கான மாற்றத்தின் முகவர்களாக பழங்குடியின் இளைஞர்கள்”; வாகரையில் நேற்று பழங்குடிகள் தினம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

‘சுய நிர்ணயத்திற்கான மாற்றத்தின் முகவர்களாக பழங்குடியின் இளைஞர்கள்.’
என்ற தொணிப்பொருளில் சர்வதேச பழங்குடிகள் தினம் நேற்று வாகரை குஞ்சன் கல் குளத்தில் தங்களது கலை கலாச்சார நிகழ்வுகளுடன் நினைவு கூறப்பட்டது.

கிழக்கு மாகாண சிவில் அமையத்தின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றது.
பழங்குடியின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வானது மங்கள விளக்கேற்றல், குல தெய்வ வழிபாட்டுடன் ஆரம்பமானது.

தலைமை உரையை பழங்குடித் தலைவர் ந.வேலாயுதம் உரையாற்றினார்.அவர் தமது உரையில் வருகை தந்த அதிதிகளை விழித்துக் கொண்டு எதிர்வரும் 8.8.2023.ஆம் திகதியன்று நடைபெறவுள்ள உலக பழங்குடிகள் தின நிகழ்வின போது அங்கு வருகை தரும் பழங்குடி தலைமைகளிடம் பிரதானமான தமது தேவைகளை முன்வைத்து கலந்துரையாடுவதற்கான விடயங்களை கண்டறியும் தினமாகவும் சந்திப்பாகவும் இன்றைய தினம் அமையப் பெற்றுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து சிவில் அமையத்தின் தலைவர் ஜே.கோபிநாத் இன்றைய நிகழ்வின் சிறப்பு தொடர்பாக சிறப்புரையாற்றினார். பின்னர் அதிதிகள் சிறப்புரையாற்றினார்கள்.கிழக்கு பல்கலைக் கழக சமூக விஞ்ஞானத்துறை தலைவர் ஜி.விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு பல்கலைக் கழக மாணவர்கள்,விரிவுரையாளர்கள் மற்றும் நூல் ஆய்வாளர்களால் இலங்கையில் உள்ள பழங்குடியினர் தொடர்பான வாழ்வியல் விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய நூல்கள்,ஆவணங்கள் என்பன பழங்குடித் தலைவரிடம் கையளிக்கப்பட்டதுடன் அவற்றினை பாதுகாப்பாக வைத்திருக்க ஆவணக் காப்பகம் ஒன்றும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.பழங்குடி மக்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றது.

நிகழ்வின் இறுதியில் கிழக்கு மாகாணத்தில் வசித்து வரும் பழங்குடி மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கான தீர்வினை வேண்டி கிழக்கு மாகாண ஆளுநருக்கு மனு சமர்ப்பிக்கப்பட்டது. நிகழ்வில் அதிதிகளாக மதகுரு சிவஸ்ரீ ம.ரெயினு சர்மா,கிழக்கு மாகாண மனித உரிமைகள் ஆணைக் குழுவின் இணைப்பாளர் ஏ.எல்,இஸடின்,கிழக்கு பல்கலைக் கழக சமூக விஞ்ஞானத் தலைவர் ஜி.விக்னேஸ்வரன்,விரிவுரையாளர் யு.வி.தங்கராசா, மட்டக்களப்பு வன வள பாதுகாப்பு அதிகாரி,அருண, வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கிராசேவகர் சமூர்த்தி உத்தியோகஸ்த்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். கிழக்கு பல்கலைக் கழக சமூக விஞ்ஞானத் துறை கற்கை நெறி மாணவர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
தமிழர் பிரதேசங்களில் புத்தரின் வருகைகள் அதிகரிப்பு; மயிலத்தமடுவில் மீண்டும் காடழித்து குடியமர்ந்த புத்தர்! (காணொளி)

தமிழர் பிரதேசங்களில் புத்தரின் வருகைகள் அதிகரிப்பு; மயிலத்தமடுவில் மீண்டும் காடழித்து குடியமர்ந்த புத்தர்! (காணொளி)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.