சென்னை மதுரவாயலில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் அதே கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை காதலித்து வந்துள்ளார் .
குறித்த மாணவன் கார் வாங்குவதே தனது விருப்பம் என கூறியுள்ள நிலையில் மாணவி வீட்டில் இருந்த 20 இலட்சம் ரூபாய் பணத்தைத் திருடி காதலனிடம் வழங்கியுள்ளார் .
பணத்தை வாங்கிக் கொண்ட மாணவன், மாணவியை ஏமாற்றியுள்ளதுடன் இது தொடர்பாக மாணவியின் வீட்டாருக்கு தெரியவந்ததையடுத்து குறித்த மாணவி அவரது தந்தையுடன் பொலிஸ் நிலையம் சென்று காதலன் மீது முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.