தேசிய தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதியதாக கூறப்படும் ஒரு செய்தித்தாள் செய்தி தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தி தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, அந்தச் செய்தி தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று ஒரு உள்ளூர் செய்தித்தாளின் தலைப்புச் செய்தி தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அரசாங்க தகவல் திணைக்களம், தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறும் அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறு கோரி, தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியதாக முன்னர் வெளியான செய்திக்கு பதில் அளிக்கும் வகையில் மேற்கண்ட அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.