கொழும்பு துறைமுகத்தில் சரக்குகளை அகற்ற வந்த ஒரு துறைமுக எழுத்தரிடம் கூடுதலாக ரூ.35,000 இலஞ்சம் கேட்ட இரண்டு துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு தொழிலாளர்களில் ஒருவர் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்த துறைமுக தொழிற்சங்கத்தின் பிரதிநிதி என்று கூறப்படுகிறது.

அதேசமயம் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.