கட்சி தலைவராகும் நோக்கத்தில் இருந்து கொண்டு செயற்படும் எம்.பியொருவர் பாராளுமன்றத்தில் ஆண் விபசாரி போல் செயற்படுகிறார் என்று இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்ததையடுத்து சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்
போது ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்த இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க“தனியார் ஊடகம் ஒன்று கடந்த காலங்களில் எனக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டது.
பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அந்த ஊடகம் அழைக்கப்பட்டபோது தவறை ஏற்றுக்கொண்டது. அந்த தனியார் ஊடகத்தை போன்று பாராளுமன்றத்தில் ஆண் விபச்சாரி ஒருவர் செயற்படுகிறார். கட்சி தலைவராகும் நோக்கத்தில் இருந்து கொண்டு செயற்படும் அவர் பாராளுமன்றத்தில் ஆண் விபசாரி போல் செயற்படுகிறார். ஆகவே அந்த ஆண் விபசாரி எம்மை குழப்பிக் கொள்ளக் கூடாது” என்றார்.
இராஜாங்க அமைச்சரின் இந்தக்கருத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம், “இராஜாங்க அமைச்சருக்கு உரிய பாராளுமன்ற உறுப்பினருடன் தனிப்பட்ட முரண்பாடுகள் இருக்கலாம். அதை அவர் முறையாக அணுக வேண்டும். அதை விடுத்து பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகிப்பது முறையற்றது. பாராளுமன்ற கலரியில் பாடசாலை மாணவர்கள்
அமர்ந்துள்ளார். இவ்வாறான வார்த்தைகளை பிரயோகிப்பது முறையற்றது. சபைக்கு தலைமை தாங்கும் பிரதி சபாநாயகர் இவ்வாறான முறையற்ற வார்த்தை பிரயோகங்களுக்கு இடமளிக்கக்கூடாது” என்றார்.
இதன்போது எழுந்த தேசிய சுதந்திரமுன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச, “இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் ஆண்விபசாரி உறுப்பினர் என்று குறிப்பிட்டார். 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் யார் அந்த ஆண் விபசாரி உறுப்பினர் என்று மக்கள் கேள்வி எழுப்புவார்கள். எனவே இந்த சபையில் ஆண் விபசாரி உறுப்பினர் இருந்தால்
அவர் யார் என்பதனை அவர் வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என்றார்.