Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் தாக்குதல் குறித்த எப்.பி.ஐ அறிக்கையை கத்தோலிக்க சபை நிராகரிப்பு

ஈஸ்டர் தாக்குதல் குறித்த எப்.பி.ஐ அறிக்கையை கத்தோலிக்க சபை நிராகரிப்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ (FBI) வெளியிட்ட அறிக்கையை இலங்கை கத்தோலிக்க சபை நிராகரித்துள்ளது.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் முகமது காசிம் முகமது சஹ்ரான் அலியாஸ் சஹ்ரான் ஹாஷிம் என எப்.பி.ஐ அறிக்கை வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்றில், FBI சிறப்பு அதிகாரியான மரிலீ ஆர். குட்வின் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகளோ அல்லது எங்கள் திருச்சபையோ எப்போதும் சுதந்திரமான, விரிவான விசாரணையை கோரிக்கொண்டிருப்பதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

எப்.பி.ஐ எப்போதும் தங்களை தொடர்புகொண்டு ஆலோசிக்காமல் இந்த முடிவை எப்படி எடுத்தது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், சட்ட மா அதிபர் டப்புல டி லிவெராவும் கூறியுள்ள கருத்துகள், சேனல் 4 உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் ஹாஷிம் தனியாக செயல்பட்டவரல்ல என்பதையும், இதற்குப் பின்னால் பெரிய சதி இருக்கக்கூடியது என்பதையும் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, சஹ்ரானின் பின்னணியில் வேறு ஒருவரும் இருக்க முடியும் என்பதில் நாங்கள் சந்தேகமில்லாமல் நம்புகிறோம்,” என குறிப்பிட்டுள்ளார்.

FBI தனது விசாரணையை எவ்வாறு நடத்தியது, யாரை சந்தித்தது, என்ன ஆதாரங்கள் கொண்டது என்பன தொடர்பாகவும் பல கேள்விகள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எப்.பி.ஐ அதிகாரிகள் எங்களை ஒருமுறையாவது சந்தித்ததில்லை. அப்படி இருக்க, அவர்கள் கூறும் முடிவை எவ்வாறு ஏற்க முடியும்?” என அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னான்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!

August 8, 2026
நாட்டில் சீரற்ற வானிலை – 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டில் சீரற்ற வானிலை – 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

August 8, 2026
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள், புறாக்கள் மீட்பு!
செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள், புறாக்கள் மீட்பு!

August 8, 2026
சமூக வலைத்தளங்கள் ஊடாக கப்பம் கோரும் மோசடி; பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!
செய்திகள்

சமூக வலைத்தளங்கள் ஊடாக கப்பம் கோரும் மோசடி; பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!

August 8, 2026
வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

August 8, 2026
Next Post
தமிழர் தலைநகரில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு தமிழரசு கட்சி அத்திவாரமிட்டுள்ளதா?

தமிழர் தலைநகரில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு தமிழரசு கட்சி அத்திவாரமிட்டுள்ளதா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.