Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இராவணனை தமிழன் என்று கூறி இனவாதத்தை தூண்ட முயற்சி; இயக்கர் குலம் என்கிறார் சரத் வீரசேகர!

இராவணனை தமிழன் என்று கூறி இனவாதத்தை தூண்ட முயற்சி; இயக்கர் குலம் என்கிறார் சரத் வீரசேகர!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையை ஆண்ட இராவணன் தமிழ் மன்னனா சிங்கள மன்னனா என்பது தொடர்பில்
நேற்று பாராளுமன்றத் தில் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, இந்த விடயத்தை முழுமையான
ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று பல பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தினர். ஐக்கிய
மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண நேற்று பாராளுமன்றத்தில் கொண்டுவந்த
தனிநபர் பிரேரணையே சர்ச்சைக்கு வழிவகுத்தது. அவர் தனது பிரேரணையில், “இராவணன்
தொடர்பாக ஆராய்ந்துமுழுமையான வரலாற்று தகவல்களை வெளிக்கொண்டு வரவேண்டும்.
இராவணன் தொடர்பில் பல்வேறு குழப்பமான தகவல்கள் உள்ளன”, என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இராவணன் தமிழர் என்றும்
சிங்கள பாராளுமன்றஉறுப்பினர்கள் சிலர் அவரை சிங்களவர் என்றும் உரிமை கொண்டாடியதை அடுத்தே சர்ச்சை வெடித்தது. இதைத் தொடர்ந்து இராவணன் குறித்து முழுமையான ஆய்வு அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.

அதேசமயம் இராவணன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர். இராணவனை தமிழர் என்று குறிப்பிட்டுக்
கொண்டு இனவாதத்தை தூண்டி விட முயற்சிக்கிறார்கள் என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றஉறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இராவணன் தொடர்பில் நேற்று பாராளுமன்றில் எழுந்த சர்ச்சையையடுத்து பேசிய அவர்,பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராவணனன் இந்தியாவுக்கு விமானத்தில் சென்று சீதாவை கடத்தி வந்தாரெனக் குறிப்பிட்டால் பெரும்பாலானோர் நம்புவதில்லை. எமது வரலாற்றில் இன்றும் உயிர் துடிப்பாக உள்ள விடயங்கள் வியப்புக்குரியாக உள்ளது.

மன்னராட்சி காலத்தில் சிங்கள பொறியியலாளர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறான நிலையில் இராவணன் விமானத்தில் சென்று சீதாவை கொண்டு வந்ததாக குறிப்பிடு வதை மறுக்க முடியாது.

இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர். இராவணன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். தமிழ் பூர்வீகம் என்பது பொய்
என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்ற போது இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப் பட வேண்டும்.

மகாவம்சத்தில் இராணவன் சிறந்த தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இராவணனின் படை கொடியில் சிங்கம் சின்னமாக உள்ளது.இந்தியா இராவணன் மீது இன்றும் அச்சம் கொண்டுள்ளதால் தான் வருடாந்தம் அவரின் உருவத்தை எரிக்கிறார்கள். ஆகவே இராணவன் சிங்கள தலைவர் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!
அரசியல்

“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!

June 8, 2026
“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு
அரசியல்

“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு

June 8, 2026
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது; நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்!
செய்திகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது; நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்!

June 8, 2026
Next Post
13 ம் திருத்தச் சட்டம் நாட்டை பிளவு படுத்தும்; மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி!

13 ம் திருத்தச் சட்டம் நாட்டை பிளவு படுத்தும்; மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.