Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்யப்பட்டமைக்கு நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி பிள்ளையான் அடிப்படை உரிமை மனு தாக்கல்

ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்யப்பட்டமைக்கு நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி பிள்ளையான் அடிப்படை உரிமை மனு தாக்கல்

6 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுத் துறை எடுத்த முடிவு, தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்கக் கோரி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப் புலனாய்வுத் துறையின் விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன, குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இமேஷ முத்துமால, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 8 ஆம் திகதி , தனது கட்சியின் அமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது, ​​குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு வந்து மட்டக்களப்புப் பகுதியில் தன்னைக் கைது செய்ததாக மனுதாரர் தந்து மனுவில் தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக தான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் மனுதாரர், குற்றப் புலனாய்வுத் துறையில் தூங்குவதற்குக் கூட தனக்கு போதுமான வசதிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டத்தரணிகளை சந்திக்க போதுமான வாய்ப்பு தனக்கு இல்லை என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் தனது அரசியல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மனுவில் சுட்டிக்காட்டுகிறார்.

எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் குற்றப் புலனாய்வுத் துறை தன்னைக் கைது செய்து தடுத்து வைத்தது தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், தன்னைத் தடுத்து வைக்கப் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை செல்லாததாக்கும் தீர்ப்பை பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தைக் கோரினார்.

மேலும், தனது சட்டத்தரணிகளை அணுகுவதைத் தடுப்பதன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரியும், தனது அடிப்படை உரிமைகளை மீறியதற்காக நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரியும் பிள்ளையான் தனது சட்டத்தரணிகள் மூலம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

1,700 மெகாவோட் என்ற எல்லையை அடைந்த சூரிய மின் உற்பத்தி; இலங்கை மின்சார சபை தெரிவிப்பு
செய்திகள்

1,700 மெகாவோட் என்ற எல்லையை அடைந்த சூரிய மின் உற்பத்தி; இலங்கை மின்சார சபை தெரிவிப்பு

May 16, 2025
பதுளையில் கைப்பற்றப்பட்ட ஒரே இலக்கத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகள்
செய்திகள்

பதுளையில் கைப்பற்றப்பட்ட ஒரே இலக்கத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகள்

May 16, 2025
இனப்படுகொலையை இல்லையென்பது இனவாதத்தின் வெளிப்பாடே; சிறீதரன் எம்.பி.
செய்திகள்

இனப்படுகொலையை இல்லையென்பது இனவாதத்தின் வெளிப்பாடே; சிறீதரன் எம்.பி.

May 16, 2025
நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை
செய்திகள்

நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை

May 16, 2025
கெரண்டி எல்ல விபத்திற்கு போக்குவரத்துச் சபை நேர அட்டவணையை பின்பற்றாமையே காரணம்; தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
செய்திகள்

கெரண்டி எல்ல விபத்திற்கு போக்குவரத்துச் சபை நேர அட்டவணையை பின்பற்றாமையே காரணம்; தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

May 16, 2025
பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; சஜித் பிரேமதாச
செய்திகள்

பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; சஜித் பிரேமதாச

May 16, 2025
Next Post
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயன்ற ஆறு பேர் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயன்ற ஆறு பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.