தற்போது நடைபெற்று வரும் பெருமளவிலான நாடுகடத்தல் சர்ச்சைக்கு மத்தியில், கல்லூரி வகுப்புகளைத் தவிர்ப்பது அல்லது அவர்களின் திட்டங்களை விட்டு வெளியேறுவது தொடர்பாக, இந்திய மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“நீங்கள் (மாணவர்கள்) உங்கள் பள்ளியைப் பாதியில் நிறுத்தினால், வகுப்புகளைத் தவிர்த்தால் அல்லது உங்கள் படிப்புத் திட்டத்தை உங்கள் பள்ளிக்குத் தெரிவிக்காமல் விட்டுவிட்டால், உங்கள் மாணவர் விசா இரத்து செய்யப்படும்.
“மேலும் எதிர்கால அமெரிக்க விசாக்களுக்கான தகுதியை நீங்கள் இழக்க நேரிடும். எந்தவொரு பிரச்சினையையும் தவிர்க்க எப்போதும் உங்கள் விசாவின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து, உங்கள் மாணவர் நிலையைப் பராமரிக்கவும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.AN