Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வீதி பாதுகாப்பு குழு கூட்டம்; கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பிறப்பித்த கட்டளைகள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வீதி பாதுகாப்பு குழு கூட்டம்; கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பிறப்பித்த கட்டளைகள்

2 days ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 மாதங்களில் வீதி விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ள விடயம் மிகவும் கவலையானது. இருந்த போதும் போக்குவரத்தை துப்பரவு செய்யப்பட வேண்டும் எனவே மாவட்டத்தில் வீதி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் உடனடியாக அதனை அகற்றவேண்டும். அதேபோல் மோட்டார் சைக்கிளில் தலைகவசம் இல்லாது பிரயாணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர கட்டளை பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வீதி பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய மாநாட்டு மண்டபத்தில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தின தலைமையில் நேற்று
(28) இடம்பெற்றத. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர இவ்வாறு பொலிசாருக்கு கட்டளையிட்டார்

மாவட்டத்தில் கடந்த 2024 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ம் திகதிவரை 611 வீதி விபத்தஜல் 72 பேர் உயிரிழந்ததுடன் 1975 மது போதையில் வாகனம் செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே 25 ம் திகதி வரை 215 வீதி விபத்துக்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களுக்கு முதலாவது காரணம் வேகமாக வாகனங்களை செலுத்தியமை மற்றும் மது போதையில் வாகனங்களை செலுத்தியமையே காரணங்கள்.

எனவே மாவட்டத்தில் கரையோரப் பிரதேசமான களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர், ஏறாவூர். சந்திவெளி, வாழைச்சேனை, ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களில் விபத்துக்கள் அதிகரித்துள்ளது. அதன் பிரகாரம் குறித்த பிரதேசங்களில் பெற்றோர்கள் தலைகவசம் அணிந்து கொண்டு பிள்ளைகளுக்கு தலைகவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் 3 பேரை ஏற்றிக் கொண்டு பிரயாணிக்கின்றனர்.

அதேபோல பலர் தலைக்கவசம் இன்றி 3 பேருக்கு மேல் பிரயாணிப்பது போக்குவரத்து சட்டத்துக்கு ஏதிரானது ஆகவே இவ்வாறு பிரயாணிப்பவர்களுக்கு தலைகவசம் அணியுமாறு 7 நாட்கள் கலா அவகசம் வழங்குமாறும் அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக போக்குவரத்து பொலிசார் சட்ட நடவடிக்கை எடுக்குவும்.

போக்குவரத்து சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான் காத்தான்குடிக்கு ஒரு சட்டம் இல்லை எனவே போக்குவரத்து சட்டத்தை மீறி வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை இந்த குறித்த பிரதேசங்களில் வீதி நடை பாதையை ஆக்கிரமித்துள்ள வர்தகர்கள் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். அதற்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதனை மீறி நடைபாதையை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசாருக்கு கட்டளையிட்டார்.

இந்த வீதி பாதுகாப்பு கூட்டத்திற்கு அமைப்பு விடுத்துள்ள போதும் பொதுமக்களின் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பு கூறவேண்டிய சிலர் வருகை தரவில்லை எனவே அடுத்த கூட்டத்துக்கு அமைப்பு விடுத்தும் வராத திணைக்கள மற்றும் தனியர் பஸ்வண்டி சங்கம், முச்சக்கரவண்டி சங்கங்கள், உட்படவர்கள் வராது இடத்தில் அவர்களுக்கு எதிராக அந்த திணைக்கள செயலாளர்களுக்கு முறைப்பாடு செய்யப்படும் என்றார்.

அதேவேளை மாவட்டத்தில் பழுதடைந்த வீதிகள் மதகுகள், மற்றும் உடைந்துள்ள வடிகான் மூடிகள், நடபாதையை அக்கிரமித்துள்ளமை, தலைகவசம் அணியாது பிரயாணிப்பவர்கள் போன்றவை தொடர்பான குறைபாடுகளை வீடியோ படங்கள் மூலமாக காட்சிபடுத்தி அந்தந்த துறை சார்ந்தவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து
செய்திகள்

மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

May 31, 2025
தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு
செய்திகள்

தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு

May 31, 2025
பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு
செய்திகள்

பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு

May 31, 2025
தேசிய விஞ்ஞான நிறுவனம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை தெரிவு
செய்திகள்

தேசிய விஞ்ஞான நிறுவனம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை தெரிவு

May 30, 2025
மே 29- ஜுன் 05 வரை தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வாரம்; மட்டக்களப்பில் விசேட நிகழ்வுகள்
செய்திகள்

மே 29- ஜுன் 05 வரை தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வாரம்; மட்டக்களப்பில் விசேட நிகழ்வுகள்

May 30, 2025
பிள்ளையானின் கட்சி காரியாலயம் கொழும்பு சிஐடியினரால் முற்றுகை; தேடப்படும் பொருள் என்ன?(புதிய இணைப்பு)
செய்திகள்

பிள்ளையானின் கட்சி காரியாலயம் கொழும்பு சிஐடியினரால் முற்றுகை; தேடப்படும் பொருள் என்ன?(புதிய இணைப்பு)

May 30, 2025
Next Post
தென்னிந்திய திரைப்பட பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்

தென்னிந்திய திரைப்பட பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.