Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்

வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

எதிர்வரும் மாதங்களில் எல்நினோ காலநிலை காரணமாக கடுமையான வரட்சி நிலை உருவாகும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச மக்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த வரட்சி நிவாரண குடிநீர் நிதி நிறுத்தப்பட்டமை குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் வலியுறுத்தியுள்ளார்.

செங்கலடியில் நடைபெற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 14ஆவது அமர்வில் உரையாற்றிய அவர், பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வந்த குறித்த நிதி சுற்றறிக்கை ஒன்றின் அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஏறாவூர் பற்று பிரதேசம் ஆண்டுதோறும் கடுமையான வரட்சியால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாகும் என்றும், குறிப்பாக பதுளை வீதியை அண்மித்த பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீண்டகாலமாக நிலவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்பகுதி மக்களின் அடிப்படை குடிநீர் தேவையை இதுவரை நிரந்தரமாக தீர்க்க முடியாத சூழ்நிலையில், வரட்சி நிவாரண நிதியையும் நிறுத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என அவர் தெரிவித்தார்.

எல்நினோ தாக்கத்தை முன்னிட்டு நாட்டில் வரட்சி நிலையை எதிர்கொள்ளத் தயாராகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ள நிலையில், குடிநீர் வசதிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தியதற்கான காரணத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் செ. நிலாந்தன் வலியுறுத்தினார்.

மேலும், இந்த முடிவுக்குப் பொறுப்பு அரசாங்கத்துக்கா அல்லது அதிகாரிகளுக்கா என்பது தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், நிறுத்தப்பட்ட நிதியை உடனடியாக மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, அரசாங்கத்தின் நிதி கிடைக்காவிட்டாலும், பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து குடிநீர் வழங்கப்படும் என ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் மு. முரளிதரன் சபையில் உறுதியளித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
விஷ விதைகள் உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி; 4 பேரின் நிலை கவலைக்கிடம்!

விஷ விதைகள் உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி; 4 பேரின் நிலை கவலைக்கிடம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.