மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள ஷேன் பாலர் பாடசாலையில் உலக சுற்றாடல் தினமானது முன்பள்ளியின் அதிபர் திருமதி டிலினி குஷாந்த் தலைமையில் நடைபெற்றது.
இதற்கு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. திருச்செல்வம் மேகராஜ் அவர்களும் ஏனைய பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சுற்றாடல் தினத்தை பற்றிய விழிப்புணர்வு பேச்சுக்களும், பிள்ளைகளுக்கான சுற்றாடல் தொடர்பான கதைகளும், சிறுவர் ஆக்கங்களும் இடம்பெற்றன.
பாலகர்களினால் சுற்றாடல் தினத்தையொட்டி மாமரக்கன்று அதிதிகளுடன் இணைந்து நடப்பட்டது.
விசேட நிகழ்வாக பிரதேச செயலகத்தின் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்த திரு. திருச்செல்வம் மேகராஜ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்பள்ளி பிள்ளைகள் நெகிழி குப்பைகளை சேகரித்து பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களிடம் கையளித்தார்கள்.
பாலகர்கள் மத்தியில் சூழலை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திய ஷேன் முன்பள்ளி அதிபர் ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர்.





























