வேறொரு நபரின் ஆவணங்களைப் பயன்படுத்தி அஜர்பைஜான் நாட்டின் எல்லையைக் கடக்க முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜர்பைஜான் அரச எல்லை சேவையின் பத்திரிகை மையம் தெரிவித்துள்ளது.
வெளியான தகவலின்படி, மே 30 அன்று, குவைத்-பாகு விமானத்தில் ஹெய்தர் அலியேவ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மலேசிய குடிமகனை எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.

ஆவண ஆய்வின் போது கடவுச்சீட்டு அவருக்குச் சொந்தமானது அல்ல என்ற சந்தேகம் எழுந்தது.
விசாரணையின் போது, தடுத்து வைக்கப்பட்ட நபர் உண்மையில் 1994 இல் பிறந்த இலங்கை குடிமகன் என்பது கண்டறியப்பட்டது என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக ஒரு குற்றவியல் வழக்கு தொடங்கப்பட்டுள்ளது, மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகின்றன.