ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து கத்தோலிக்க தேவாலயம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான நீதிக்கான நடவடிக்கைகள் தற்போது அரசு மேற்கொண்டு வரும் போதிலும், இந்த செயல்முறை மெதுவாக நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் கவனிக்கப்பட வேண்டியது என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ள புதிய விசாரணைகள் திருப்திகரமானவை என்றாலும், “மொத்த செயல்முறை மெதுவாகவே” நடைபெறுவதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

“கடந்த ஆறு ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விசாரணைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகே, மீண்டும் விசாரணைகள் ஆரம்பித்தன. ஆனால், மெதுவாக நடைபெறுவது நல்லது அல்ல என அவர் குறிப்பிட்டுளார்.
எனவே, அரசு எந்தப் பகுதியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்,” என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன், தாக்குதல் தொடர்பான வழக்குகளில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பங்களிப்பு திருப்திகரமாக இல்லையெனவும், எனவே தனிச்சிறப்பு வழக்கறிஞர் அலுவலகம் ஒன்று அமைக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.