நுவரெலியா மாநகர சபையின் முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் உபாலி வனிகசேகர, திறந்த வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நுவரெலியா மாநகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் மேயர், பிரதி மேயர் தெரிவு இன்றையதினம் காலை 8.30 மணியளவில் நுவரெலியா மாநகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் தெரிவு முதலில் இடம்பெற்றது.

அதன்போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் உபாலி வனிகசேகர, திறந்த வாக்கெடுப்பு மூலம் மாநகர சபையின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து பிரதி மேயர் தெரிவு இடம்பெற்றது.
பிரதி மேயர் தெரிவுக்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வீரமலை இளையராஜாவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக சிவன்ஜோதி யோகராஜாவும் போட்டியிட்டனர்.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட சிவன்ஜோதி யோகராஜா 14 வாக்குகளை பெற்று பிரதி மேயராக தெரிவானர்.
இவருக்கு எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வீரமலை இளையராஜா 11 வாக்குகளை பெற்றுக் கொண்டார்.