Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மக்கள் மிதமிஞ்சிய மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சு தகவல்

மக்கள் மிதமிஞ்சிய மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சு தகவல்

12 months ago
in செய்திகள்

இலங்கை மக்கள் மிதமிஞ்சிய மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதி சுகாதார அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் உலக தரத்தைவிட மிக அதிக அளவில் மருந்துகளை பயன்படுத்துகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் தற்போது 863 பொதுப் பெயர் மருந்துகள் (generic drugs) கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அவற்றில் மூன்றில் இரண்டு பாகம் இறக்குமதி செய்யப்பட்டவையாகவும், மற்றவை உள்ளூர் தயாரிப்புகளாகவும் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய மருந்து வகைகள் அவசியமில்லாமல் அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தவறான மருந்தளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாத காரணத்தால் மருந்துகளின் பாவனை மிக அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

நமது நாட்டில் 863 மருந்து வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளில் கூட இதைவிட குறைவாகவே மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருந்தளிப்பு தொடர்பான நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் நவீன நெறிமுறைகள் கொண்டு 450–500 மருந்துப் பிரிவுகளுக்கு இந்த எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு வருடாந்த மருந்து செலவுகளில் பெரும் சிக்கனத்தை ஏற்படுத்தும் எனவும், அரசு ஆண்டுக்கு 185 பில்லியன் ரூபாவினை மருந்துகளுக்காக ஒதுக்கி வருவதாகத் தெரிவித்தள்ளார்.

உரிய முறையில் தகவல்கள் பெற்றுக் கொண்டு கொள்வனவு செய்யத் தவறியதன் காரணமாக நாட்டில் மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
செய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

June 16, 2026
கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை
செய்திகள்

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

June 16, 2026
காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!
செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

June 16, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!

June 16, 2026
Next Post
மொட்டு கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி மேயரின் கட்சிஉறுப்புரிமை இடைநிறுத்தம்

மொட்டு கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி மேயரின் கட்சிஉறுப்புரிமை இடைநிறுத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.